கதைகள் சிறுகதை

அமானுஷ்யம் (பாகம் 5) – ஆர். வசந்தா

நாமும் பல அமானுஷ்ய நிகழ்ச்சியைப் பற்றி தெரிந்து கொண்டோம். இன்னும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். கோனேரிராஜபுரம் நடராஜரைப் பற்றிய சில அமானுஷ்யங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த ஊரை ஆண்ட வரகுணபாண்டியன் தன் அரசவை சிற்பியை கூப்பிட்டு தனக்கு ஒரு உதவி தேவைப்படுவதாகக் கூறினார். நம் ஊரில் ஒரு பெரிய நடராஜர் சிலை செய்து கோவிலில் வைத்து வணங்க வேண்டும் என்றார் அவர். அதற்கேற்றார் போல் நீங்கள் தான் சிலை செய்ய வேண்டும் என்றும் […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

பெயர் சூட்டு விழா..! – ராஜா செல்லமுத்து

வண்ண விளக்குகளால் நிறைந்து நின்றது வாசலில் போடப்பட்ட பந்தல். நட்சத்திர வெளிச்சத்தைப் போல ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்தன பந்தலைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சீரியல் பல்புகள். நெடு வானத்தில் முழுமதியின் வெளிச்சம் பந்தலில் பட்டுச் சின்னச்சின்னச் கீற்று வெளிச்சத்தை அந்தப் பகுதி முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தது . விடிந்தால் பெயர் சூட்டு விழா. அத்தனை சிறப்பாக நடைபெற வேண்டும் என்று அங்குமிங்கும் நடந்து கொண்டே இருந்தார் மாரிமுத்து. ‘எப்படியும் ஆயிரம் பேருக்கு மேல வருவாங்க. அவர்களச் சமாளிச்சு சாப்பிட […]

Loading

சிறுகதை விழாக்கள்

விழா துவக்கத்தை அறிவிக்கிறோம் ..!

“விழாவைப் பற்றி யோசித்தால் அதன் பன்முகம் வெளிப்படும். பண்டிகை ,கொண்டாட்டம் என்பன நம் கண் முன்னே வரும். விழாவின் சிறப்பு அதன் கொண்டாட்டம் மட்டுமின்றி அதன் பின்னணியில் இருக்கும் சாராம்சத்தைப் பல தலைமுறைகள் தாண்டி அவற்றைத் தெரிந்து கொள்ளத்தான். ஒருவரின் பிறப்பு, இறப்பு, வெற்றிகள் வீழ்த்திய அரக்கன் என்பன என்றும் போற்றப்பட விழாக்கள் தோன்றின என உணர்கிறோம். இன்று என்ன விழா ? என்பதைத் தினசரி காலண்டர் சொல்லும். ஆனால், இன்றைய சிறப்பை வரும் தலைமுறை எப்படிக் […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

வசந்த விழா..! – ராஜா செல்லமுத்து

“அவசியம் நீங்க வசந்த விழாவுக்கு வந்திரனும் “ என்று தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து அழைப்பிதழை எடுத்து தனசேகருக்கு கொடுத்தார் பாண்டியன். ” அவசியம் குடும்பத்தோட வந்திருவோம்” என்றார் தனசேகர். ” டீக் குடிக்க சொன்னோம் வேண்டாம்னு சொல்லிட்டிங்க “ ” எத்தன வீட்டுல டீ குடிக்கிறது. டீ, காபி, பால், அப்படி இப்படின்னு வயிறே கெட்டுப் போச்சு . இன்னொரு நாள் வாரேன். வீட்ல ஒக்காந்து சகவாசமா சாப்பிடலாம் “ என்றார் பாண்டியன். ” ம்” […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

இரவு நேரப் பயணம்..! – ராஜா செல்லமுத்து

இரவு நேரப் பயணங்கள் என்றாலே தனி சுகம். ரயிலோ? பஸ்ஸோ? பயணங்களைக் கடத்தும் வாகனங்கள், ஜில்லென்று வீசும் ; காற்றை அனுபவிப்பதற்காகவே சன்னல் ஓரங்களில் இடம் பிடித்து ரசனையோடு பயணம் செய்யும் மனிதர்கள் இங்கு நிறைய இருக்கிறார்கள். அன்று இரவு நேரப் பயணம் மேற்கொண்டான் மதியழகன்.ரசனை மிகுந்தவன். கண்களில் பார்ப்பதை எல்லாம் காட்சியாக வடிவமைக்கும் கனாக்காரன். இந்த இரவுப் பயணம் ரம்மியமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டு சன்னலோரம் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் சில்லென்று பட்டுத் தெறித்து […]

Loading

கதைகள் சிறுகதை

ஆச்சாள்புரம்..! – ராஜா செல்லமுத்து

” இது தான் ஆச்சாள்புரமா?” என்று அந்த ஊரில் இறங்கியவுடன் உள்ளூர்வாசி ஒருவரிடம் கேட்டான், சத்யா. அவனை மேலும் கீழும் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர்.. ” ஆமாங்க. நீங்க யாரப் பாக்கணும் ? “ என்று சில பெயர்களைச் சொன்னார், அவர் பேசுவதைக் கேட்ட சத்யா “, இல்லங்க . எனக்கு இங்க யாரையும் தெரியாது. “ என்று திருதிருவென விழித்தான். அப்படிப் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவைப் பார்த்தவர் ” பெறகு எதுக்காக இங்க வந்திங்க? “ […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

நெஞ்சில் வாழும் நினைவுகள் – வத்சலா சிவசாமி

அனுசா வெளியூர் பேருந்தில் பயணித்து கடலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் போது நல்ல மழை பிடித்துக் கொண்டது. இன்னும் ஏறக்குறைய ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுதான் சித்தப்பா வீட்டை அடைய வேண்டும். நண்பன் தீபக்கின் ஊருக்குள் செல்வது அதைவிட கடினம். அமாவாசை இரவில் அந்த ஊர் முழுவதும் இருட்டு போர்வை விரித்திருந்தது. ஊர் மக்கள் ஏழு மணிக்கெல்லாம் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு உறங்கப்போய் விடுவார்கள். இரவு ஒன்பது பத்து மணிக்கெல்லாம் ஊர் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

நம்ம கலாச்சாரம்… – ஜூனியர் தேஜ்

ஜனவரி கடைசியில் கிருஷ்ணனுக்கும் நிருதாவுக்கும் முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. நிச்சயதார்த்தப் பரிசாக விலை உயர்ந்த கைப்பேசியை கிருஷ்ணனுக்குப் பரிசாகக் கொடுத்தாள் நிருதா. கைப்பேசிக்கு ஓய்வே தராமல் நிறை…ய்ய கதைத்துக் கொண்டார்கள். அவ்வப்போது நட்சத்திர ஓட்டல்களிலும் மால்களிலும் நேரிலும் சந்தித்துக் கொண்டார்கள். மார்ச் முதல் வாரத்தில் திருமணம். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இருவரும் ஒன்றாய்ச் சென்று திருமண அழைப்பிதழ் வைக்க முடிவெடுத்தார்கள். “கிருஷ்..” “ம்..” “டிரஸ், பச்சேஸ்’ பண்ணப் போலாமா ..?” “ஓகேடா செல்லம்..!” எந்தக் கடைக்கு, எத்தனை […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

ரொமான்ஸ் ரகசியம் – ஆர். வசந்தா

பாலகிருஷ்ணன் ஒரு அரசாங்க பணியில் இருப்பவன். அவன் தன் சொந்த கிராமத்திற்குத் திருவிழாவிற்குப் போனான். அவன் அம்மா தன் சொந்ததிலேயே ஒரு பெண் இருப்பதாகச் சொன்னாள். அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தினாள். அவனுக்கு அப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. ஆனாலும் தாயின் வற்புறுத்தலின் பேரில் பெண் பார்த்து வரச் சம்மதித்தான். பெண் பெயர் உமா மகேஸ்வரி. ஒரு எளிய குடும்பம் தான். அப்பா புரோகிதர். 8 வது வரை படித்திருந்தாள். வீட்டு […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

ப்ளக்ஸ் …! – ராஜா செல்லமுத்து

” இத முன்னாடியே பண்ணியிருந்தா இது நடந்திருக்காது. இவ்வளவு பெரிய தவறு நடந்ததுக்கு இங்க இருக்கிற, போலீஸ் , டிராபிக் போலீஸ் தான் காரணம். இத சும்மா விடக் கூடாது. நான் அப்பவே சொன்னேன். அவங்க சட்ட பண்ணல “ என்று வாதிட்டான் ராமகிருஷ்ணன். ” நாம என்னங்க, பண்றது எல்லாம் பணம். அரசியல் செல்வாக்கு. மேலிடத்தில ஆளத் தெரியும் அப்பிடிங்கிற ஆணவம். இதே விஷயம் அவங்க வீட்டுல நடந்திருந்தா சும்மா இருப்பாங்களா ? அவங்களுக்கு வந்தா […]

Loading