அமுதன் அகிலாவிற்கு ஒரே ஒரு பையன். ஆனந்தன் என்று பெயர். அவனுக்கு கல்யாணம் செய்ய அமுதன் மற்றும் அகிலா பெண் பார்க்கத் தொடங்கினார்கள். அமுதன் தன் நண்பர்கள் மூலமும் தனது சகோதரன் அமரேசன் மூலமும் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அமரேசன் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வைத்தார். அன்று காலையில் வந்த அமரேசன் அமுதனிடம் பக்கத்து ஊரில் தனது நண்பனுக்குத் தெரிந்தவருக்கு திருமண வயதில் பெண் இருக்கின்றாளாம். நண்பன் அவர்களிடம் பேசி விட்டு சொல்கிறேன் என்று சொல்லியுள்ளார். […]