சென்னை, ஜன.17– அண்ணா தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா […]