செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜன.7– இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– ‘மனதின் வெறுமைகளை எல்லாம் தன் இசையால் இட்டு நிரப்பும் ஈடில்லாக் கலைஞன், இந்திய இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்த புயல், அன்பு இளவல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என் உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இசைபட வாழ்க!’ இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் உள்ள படிப்பக வளாகம்: ஸ்டாலின் பார்வையிட்டார்

தூத்துக்குடி, டிச. 30– தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பாளை-ரோடு தமிழ்ச்சாலை பகுதியிலுள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படிப்பக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அங்கு படிக்கும் மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோடு தமிழ்ச்சாலை பகுதியில் அமைந்துள்ள பூங்காவில், டி.என்.பி.எஸ்.சி., வங்கி, இரயில்வே போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், இயற்கை சூழலில் அமர்ந்து படிக்கும் வகையிலும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், நாளிதழ்கள், இருக்கை வசதி, மின் வசதி, Wi-Fi, […]

Loading

செய்திகள்

பெரியார் பகுத்தறிவு டிஜிட்டல் நூலகம் ஆய்வு மையம்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, டிச.24– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, பெரியார் திடலில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:– வாழ்க்கையில் எத்தனையோ பேர் பரிசுகளை நாம் பெற்றிருக்கலாம், வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தப் பரிசுக்கு எதுவும் ஈடாகாது என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். போதும், எனக்கு இது போதும். திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்து கொண்டிருப்பவர்களுக்கு […]

Loading

செய்திகள்

மீன்பிடிக்கும் போது கழுவெளியில் தவறி விழுந்து 3 சகோதரர்கள் பலி

குடும்பத்துக்கு தலா 2 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் உத்தரவு சென்னை, டிச.24– விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் மீன்பிடிக்கும் பொழுது கழுவெளியில் தவறி விழுந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், மரக்காணம் (தெற்கு) கிராமம் சந்தைத் தோப்புத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் லோகு (எ) லோகேஷ், (வயது […]

Loading

செய்திகள்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை கொன்றுவிடும்: ஸ்டாலின் ‘டுவிட்’

சென்னை, டிச.16– ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் ஜனநாயகத்தை கொன்றுவிடும். இந்த திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது:– இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும். அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத்தேர்தல்களை […]

Loading

செய்திகள்

‘உலக செஸ் சாம்பியன்’ குகேஷூக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, டிச.13– உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (FIDE World Championship 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷ் நேற்று நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக […]

Loading

செய்திகள்

மழை பாதிப்பை சமாளிப்போம்: ஸ்டாலின் உறுதி

சென்னை, டிச.13– மழை வெள்ள பாதிப்பை சமாளித்து நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். கேள்வி: தென் மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? முதலமைச்சர் பதில்: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது. அதற்கு ஏற்கனவே […]

Loading

செய்திகள்

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும்: ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை, டிச.13- மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை, மாநிலங்களின் குரலை அழித்து விடும்; கூட்டாட்சியியலைச் சிதைத்துவிடும்; அரசின் ஆட்சி நிர்வாகத்துக்குத் தடையை […]

Loading

செய்திகள்

75வது பிறந்தநாள்: ரஜினிகாந்த்துக்கு ஸ்டாலின், எடப்பாடி, கமல், விஜய் வாழ்த்து

சென்னை, டிச. 12– 75வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி, கமல், விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 75 பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர், திரையுலகத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த்துக்கு வெளியிட்டுள்ள பிறந்தநாள் […]

Loading

செய்திகள்

சோனியா பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, டிச.9– காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். பெரும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறி, மேன்மைப்பண்பு கொண்ட தலைவராகத் தொடர்வது என அவரது வாழ்க்கைப் பயணம் அவரது போராட்டக்குணத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகத் திகழ்கிறது. வெற்றியும் அமைதியும் நிறைந்து – நீண்டகாலம் அவர் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Loading