செய்திகள்

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம், ஜன. 2– ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி மற்றும் அவரது மகள், மருமகன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர் வரிசை கனி (65). உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவருடன் மகள் அனீஸ் பாத்திமா (40), மருமகன் சகுபர் சாதிக் (47), ஹர்ஷத் […]

Loading

செய்திகள்

எட்டயபுரம் அருகே கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கோவில்பட்டி, டிச. 25– எட்டயபுரம் அருகே கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அய்யன் தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவரது நண்பர்கள் திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் (38), அலங்கியத்தைச் சேர்ந்த விக்னேஷ் (31), பழனி அருகே ஆண்டி நாயக்கர் வலசுவை சேர்ந்த மகேஷ் குமார் (35), பழனி அருகே ராசுகாட்டுத்தோட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35). இவர்கள் […]

Loading

செய்திகள்

நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி மோதியது; 2 குழந்தை உட்பட 3 பேர் பலி

புனே, டிச. 23– மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். புனே நகரின் வகோலி சௌக் பகுதியில், நடைபாதையில் 12 பேர் தூங்கி கொண்டு இருந்தனர். அந்த வழியாக, வந்த லாரி, நிலைதடுமாறி அவர்கள் மீது ஏறியது. இதில் 2 குழந்தை உட்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, […]

Loading

செய்திகள்

பிரேசிலில் வீடு மீது விமானம் மோதி விபத்து: 10 பேர் மரணம்

பிரேசிலியா, டிச. 23– பிரேசிலில் வீடு மீது விமானம் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்துக்களின் எண்ணிக்கை அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளே இது போன்ற விபத்துக்களுக்கு வழி வகுக்கின்றன. ஒரு சில நேரங்களில் விபத்தில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், சில விபத்துக்கள் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப காரணங்களை கண்டறிந்து இனி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாதவாறு நடவடிக்கை […]

Loading

செய்திகள்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து நடந்த பகுதிகளுக்கு செல்ல தடை

மேட்டூர், டிச. 22– மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல 3 நாள்களுக்குத் தடை விதித்து தொழிற்சாலைகள் பாதுகாப்பு இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல்பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது பிரிவில் 1 அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 19-ம் தேதி மாலை முதல் […]

Loading

செய்திகள்

மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்

மதுரை, நவ. 28– மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் புதன்கிழமை இரவு சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக, கோரிப்பாளையத்தில் தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை ரூ.190 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு அந்த பகுதியில் இரும்பு சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென இரும்பு சாரம் பாரம் தாங்கமால் சரிந்து […]

Loading

செய்திகள்

மோட்டார்சைக்கிள் கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்து: தாய், 2 மகன்கள் பலி

காஞ்சிபுரம், நவ. 28– மோட்டார்சைக்கிள் கண்டெய்னர் லாரியில் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 2 மகன்களும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். விபத்து சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த சென்ன சமுத்திரம் மலைமேடு பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவரின் மனைவி […]

Loading

செய்திகள்

கார் டயர் வெடித்து விபத்து:9 மாத குழந்தை பலி

சேலம், அக். 26 சேலம்- – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் 9 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் – -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மேம்பால சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்து 9 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. குழந்தையின் பெற்றோர்கள் […]

Loading

செய்திகள்

ஆந்திராவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி

திருப்பதி, ஆக.17– ஆந்திராவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கொத்தப்பேட்டையில் மூதாட்டி ஒருவர் இன்று அதிகாலை குழந்தைகளுக்கு பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். நேற்று இரவு கியாஸ் சிலிண்டரை சரியாக மூடாததால் இரவு முழுவதும் கியாஸ் கசிந்து அறையில் பரவி இருந்தது. மூதாட்டி கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சிக்கிய […]

Loading

செய்திகள்

ஜார்க்கண்டில் ஹவுரா – மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி

20க்கும் மேற்பட்டோர் காயம் ஜார்க்கண்ட், ஜூலை 30– ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயில்வே நிலையம் அருகே ஹவுரா –- மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரெயில் நிலையம் அருகே சரைகேலா என்ற பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு நின்று கொண்டு இருந்தது. அதிகாலை 3:43 மணியளவில் ஹவுரா – மும்பை ரெயில் (ரயில் எண்: 12810) ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயில் நிலையத்தை […]

Loading