இன்று வினாயகர் சதுர்த்தி கோலாகலம் கோவில்களில் வரிசையில் நின்று தரிசனம் சென்னை, செப்.7– தமிழகம் முழுவதும் இன்று வினாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவிதமான வினாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபட்டனர். கோவில்களில் வினாயகருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரம், பூஜைகள் நடந்தன. எல்லா கோவில்களிலும் ‘கியூ’வில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். வீட்டில் பூஜை செய்ய சாலைகளில் விற்கப்பட்ட களிமண் வினாயகர் சிலைகளை பக்தர்கள் குழந்தைகளுடன் குதூகலமாக வாங்கி சென்றதை […]