இளமதி அதிர்ச்சி அடைந்தாள். நகர சூழல் பெண்களை முன்னேற்றியிருக்கும் என எண்ணியிருந்தவளுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. புதிய பணிக்காக தன் சொந்த ஊரை விட்டு நகரத்திற்கு வந்தவள் இளமதி . அது அவளுக்கு வருத்தமாகத் தான் இருந்தது. இருப்பினும் தான் சிக்குண்டிருந்த சிற்றூர் சமூகச் சூழலிருந்து விடுதலை கிடைக்கப்போகும் எண்ணம் அவளுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. அவள் வளர்ந்தது ஒரு நல்ல சூழலை போல் பிறருக்கு தோன்றினாலும் இளமதிக்கு அது உண்மை இல்லையென்று தெரியும். பெண்ணாக பிறந்ததினால் […]