விழுப்புரம், அக்.15-– விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள விஜய் கட்சி மாநாட்டுக்கு மேலும் 5 கேள்விகள் கேட்டு போலீசார், நோட்டீஸ் வழங்கியுள்ளனர். தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்காக விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் முதலில் 33 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருந்தனர். பின்னர் அந்த நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிபந்தனைகளை […]