ராதாபுரம், செப். 10– 3 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு மூடி படுகொலை செய்த எதிர்வீட்டு பெண் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 36). இவருடைய மனைவி ரம்யா. இவர்களது 3 வயது ஆண் குழந்தை சஞ்சய். அங்குள்ள அங்கன்வாடிக்கு சென்று வந்தான். இவர்களின் எதிர்வீட்டில் வசிப்பவர் தங்கம்மாள் (49). இந்த 2 குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே குழாயில் தண்ணீர் பிடிப்பது உள்ளிட்டவை தொடர்பாக […]