சென்னை, பிப்.16–- வடசென்னை அனல்மின் நிலையம் மூலம், தமிழகத்திற்கு தேவையான தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், மின் உற்பத்தி மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், மின் உற்பத்தி இயக்குனர்கள் செந்தில்குமார், கருக்குவேல்ராஜன் மற்றும் தலைமை என்ஜினீயர்கள் உள்ளிட்ட உயர்நிலை குழுவினர், வடசென்னை அனல் மின் நிலையம் 1 மற்றும் 2-ல் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். […]