சென்னை, நவ. 30– கனமழை காரணமாக சென்னையில் குறைவான அளவில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெஞ்ஜல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக புறநகர் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு – தாம்பரம் இடையே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து புறநகர் பிரிவுகளிலும் மின்சார ரெயில் […]