செய்திகள் நாடும் நடப்பும்

பெருமைப்படுகிறோம்: ராணுவத்துக்கு காங்கிரஸ் ராகுல் பாராட்டு

டெல்லி, மே 7– சிறப்பாக செயல்பட்ட, இந்தியா பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பெருமைப்படுகிறோம் மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி

புதுடெல்லி, ஏப். 24– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், அமெரிக்க சுற்றுப் பயணத்தை பாதியில் ரத்து செய்து நாடு திரும்பிய ராகுல் காந்தி கலந்து கொண்டார் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் […]

Loading

செய்திகள்

2 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

நியூயார்க், ஏப். 20– இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாட உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தலைமையில் உற்சாக […]

Loading

செய்திகள்

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக குற்றப்பத்திரிகை

டெல்லி, ஏப். 16– நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை தொடர்பான வழக்கில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரால் கடந்த 2010-ஆம் ஆண்டு யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை நடத்தி வருகிறது. தற்போது யங் இந்தியன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரர்களாக சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி, மகன் […]

Loading

செய்திகள்

விலைவாசி உயர்வால் மக்கள் அவதி ; கும்பகர்ணன்போல தூங்கும் அரசு: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி, டிச. 24– விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாடம் போராடி வருவதாகவும், ஆனால் கும்பகரணன் போல் மத்திய அரசு தூங்குவதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்ச்சித்துள்ளார். சமீபத்தில் கிரி நகரில் உள்ள காய்கறி சந்தைக்குச் சென்றபோது, உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் படும் அவதியும், அவர்கள் அடையும் இன்னல்கள் பற்றியும் இல்லத்தரசிகளுடன் ராகுல் காந்தி உரையாடிய விடியோ பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– சில நாட்களுக்கு […]

Loading

செய்திகள்

அரசமைப்புப் புத்தகத்தை கையில் ஏந்தி ராகுல், பிரியங்கா பேரணி

புதுடெல்லி, டிச. 6– அதானி லஞ்ச விவகாரத்திற்கு எதிராக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் பேரணியில் ஈடுபட்டனர். நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிர்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் […]

Loading

செய்திகள்

மக்களிடம் வெறுப்பை விதைக்காமல் அன்பை விதைக்கும் அரசியலே தேவை

பிரியங்காவை புகழ்ந்து ராகுல் காந்தி பேச்சு திருவனந்தபுரம், நவ. 04– எனது தந்தை கொலையில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டவரையே கட்டி அணைத்து, அவரை பற்றி கவலைப்பட்ட அன்புள்ளம் கொண்டவர் பிரியங்கா காந்தி என்று ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு, 13 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரியங்காவும், பா.ஜ.க வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ் மற்றும் இடதுசாரி வேட்பாளராக சத்யன் மோகெரியும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் […]

Loading

இந்தியா 76! செய்திகள் நாடும் நடப்பும்

அகல் விளக்குகள் செய்து அசத்தினார் ராகுல் காந்தி

புதுடெல்லி, நவ. 2 ராகுல் காந்தி அகல் விளக்கு செய்யும் குடும்பம் ஒன்றைச் சந்தித்தார். பின்னர் அவர்களோடு சேர்ந்து தான் செய்த அகல் விளக்குகளை தனது தாய் மற்றும் சகோதரிக்கு கொடுப்பதற்காக வாங்கிச் சென்றார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி வருகிறார். குறிப்பாக விவசாயிகள், செருப்பு தைப்பவர், லாரி-–பஸ் டிரைவர்கள், முடி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

2 மாநில சட்டமன்ற தேர்தல் தரும் பாடம்

தலையங்கம் அண்மையில் வெளிவந்த அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தியாவின் அரசியல் களத்தில் ஏற்பட்டு வரும் முக்கிய அரசியல் பரிமாணங்களையும், மாற்றங்களையும் வெளிப்படுத்துகின்றன. பாரதீய ஜனதா கட்சிக்கு (பாஜக) அரியானாவில் வெற்றி மிக முக்கியமானது. தேர்தலுக்கு முன் வெளிவந்த கருத்துக் கணிப்புகளை தாண்டி, மூன்றாவது முறை தொடர்ந்து வெற்றியை பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாதது என்பது மீண்டும் நிரூபணமாகி […]

Loading

செய்திகள்

விமானப்படை நாள்: மோடி, ராகுல் வாழ்த்து

புதுடெல்லி, அக். 8– இன்று இந்திய விமானப்படை நாளையொட்டி பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகளவில் திறன் வாய்ந்த விமானப்படை அமையப்பெற்ற நாடுகளில் நம் பாரத தேசமும் ஒன்றாக திகழ்கிறது. விமானப்படை வீரர்களைப் போற்றி கவுரவிக்கும் விதமாக அக்டோபர் 8-–ந்தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, […]

Loading