செய்திகள்

டெல்லி இல்லத்தில் ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி, ஜூன் 5– உலக சுற்றுச்சூால் தினத்தையொட்டி டெல்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி இன்று ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார். சமீபத்தில் கட்ச் நகருக்கு பிரதமர் மோடி சென்றபோது, ​​1971ம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்க துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழு அவரை சந்தித்து சிந்தூர் மரக்கன்றுகளை வழங்கியது. இந்த மரக்கன்றை நடவு செய்து பராமரிப்பேன் என அந்த பெண் குழுவிடம் பிரதமர் மோடி கூறியிருந்தார். தற்போது அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றினார். பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க […]

Loading

செய்திகள்

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி : வீரர்களுடன் கலந்துரையாடல்

சண்டிகர், மே 13– எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்த விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதற்குப் பாகிஸ்தான் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், இருநாடுகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மே 10ம் தேதி மாலை 5 மணியளவில் சுமூகமான தீர்வை எட்டியதோடு, போர் நிறுத்தம் செய்த […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் சீண்டினால் பதிலடி : பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி, மே.13- ‘போர் நிறுத்தம் தற்காலிகம் தான், பாகிஸ்தான் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்’ என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை, பின்னர் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று இரவு முதன் முறையாக உரையாற்றினார். அவர் கூறியதாவது:- நாட்டின் பலம், ராணுவ வீரர்கள் பலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. நாம் என்ன செய்வோம் என்று […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

திருவனந்தபுரம், மே 2– கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரூ.8,867 கோடியில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த துறைமுகம் கேரளத்துக்கும் நாட்டுக்கும் பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் மோடி உறுதிப்பட கூறினார். விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்துக்கான முதலீட்டில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை கேரள அரசு செலவிட்டுள்ளது. துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து மோடி பேசியதாவது:– விழிஞ்சம் துறைமுகம் காரணமாக கடல்சார் வர்த்தகத்தில் கேரளம் முக்கிய இடத்தைப் பெறும் என […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

‘சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது”: பிரதமர் மோடி பெருமிதம்

மும்பையில் ‘வேவ்ஸ்’ மாநாடு: ரஜினி, ஏ.ஆர்.ரகுமான், மோகன்லால் பங்கேற்பு மும்பை, மே 1– ”சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது” என ‘வேவ்ஸ்’ மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதத்தோடு குறிப்பிட்டார். மும்பையில் முதலாவது உலக ஒலி-–ஒளி மற்றும் பொழுதுபோக்கு ‘வேவ்ஸ்’ உச்சி மாநாடு இது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன், மகாராஷ்டிரா முதல்-மந்திரி பட்னாவிஸ், நடிகர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், மோகன்லால், சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் […]

Loading

செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் சந்திப்பு :

புதுடெல்லி, ஏப்.22- டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். ஜே.டி.வான்சுடன் அவருடைய மனைவி உஷா வான்ஸ், குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் மற்றும் உயர் அதிகாரிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் டெல்லியின் பிரதிபலிப்பான அக்சர்தாம் கோவிலுக்கு சென்றனர். இதன்பிறகு ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் லோக் […]

Loading

செய்திகள்

2 நாள் அரசுமுறை பயணமாக மொரீசியஸ் சென்றடைந்த மோடி

மொரிசீயஸ், மார்ச் 11– பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக மொரீசியஸ் சென்றடைந்துள்ளார். மொரீஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க 2 நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று மொரீஷியஸ் புறப்பட்டார். இது தொடர்பாக மோடி வெளிட்ட அறிக்கையில், “எனது நண்பர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களின் அழைப்பை ஏற்று, மொரீஷியஸின் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நான் மொரீஷியஸுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறேன். மொரீஷியஸ் […]

Loading

செய்திகள்

மகா சிவராத்திரி: மோடி, ராகுல் வாழ்த்து

புதுடெல்லி, பிப். 26– இன்று மகா சிவராத்திரி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்றிரவு கொண்டாடப்படவுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:– மகா சிவராத்திரி திருநாளில் நாட்டு மக்கள் […]

Loading

செய்திகள்

வெள்ளை மாளிகையில் டிரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு; பிரதமர் மோடி மகிழ்ச்சி

அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பினார் புதுடெல்லி, பிப். 14– ‘வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்’ என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். பிரான்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டு நாள் அரசு முறை பயணமாக 12ம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், உலக பெரும் […]

Loading

செய்திகள்

தேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, ஜன. 24– தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் குழந்தைகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று, தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தைக்கு தொடர்ந்து அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் எங்கள் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தையின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. பெண் குழந்தைகளை மேம்படுத்தும் […]

Loading