சிறுகதை

இறுதியில் – மு.வெ.சம்பத்

சாரதா அரசாங்க பணியில் பொதுப் பணித்துறையில் சேர கடிதம் வர, தனது ஊருக்குப் பக்கத்திலேயே உள்ள அலுவலகத்தில் பணி நியமனம் வாங்கினார். அலுவலகத்தில் உள்ளவர்களுடன் சற்று இணக்கமாக சென்று வேலைகளைக் கற்றுக் கொண்டார். நிறைய மக்கள் வந்து செல்லும் அலுவலகம் ஆனதால் எப்போதும் அலுவலகம் கலகலப்பாக இருந்தது. தனது பணியில் நேர்மையுடன் பணி புரிந்தார் சாரதா. வேலைக்குச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் கடந்த வேளையில் சாரதா அப்பாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டு , என்ன […]

Loading

சிறுகதை

தீய அரக்கனை ஒழிப்போம் மு.வெ.சம்பத்

மு.வெ.சம்பத் பச்சையப்பன் சின்ன வயசு முதல் விளம்பரம் கேட்பதிலும் அதை மறுபடியும் திரும்பி சொல்வதிலும் ஆவல் மிக்கவராகவும் இருந்தார். விடுமுறை நாட்களில் அந்த காலத்தில் வரும் சினிமா விளம்பர வண்டியை மிகவும் ரசித்துப் பார்ப்பதோடு அதன் பின்னால் சிறிது தூரம் செல்வார். நாட்கள் செல்லச் செல்ல, பச்சையப்பன் வரும் வண்டியில் விளம்பரம் பற்றி பேச, அவரது குரல் வசீகரத்தினால் அவருக்கு ஒரு இடம் கிடைத்தது. சுற்றிலும் உள்ள ஊர் மற்றும் பல இடங்களில் இருந்து இவரைப் பேச […]

Loading

சிறுகதை

அன்பிற்கு அடைக்கும் தாழ் உண்டோ – மு.வெ.சம்பத்

சாம்சன் மலைப் பகுதியில் உள்ள கிராமத்தில் மக்களோடு மக்களாய் வாழ்ந்து வந்தார். அது மொத்தம் 50 வீடுகள் அடங்கிய கிராமம். இயற்கையோடு இணைந்த வாழ்வு. சற்று சமமாக உள்ள மலைப் பகுதியில் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தார்கள் கிராம மக்கள். வெயில் காலங்களில் வாழ்வு நன்றாகவே இருக்கும். மழை மற்றும் பனிக் காலத்தில் வாழ்வு என்பது மிகவும் கடினம் தான். அடை மழை பெய்தால் மணல் கற்கள் மேலிருந்து உருண்டு வந்து பாதிப்பை உண்டாக்கும். இதற்கு சாம்சன் […]

Loading

சிறுகதை

வழி வழியாய் – மு.வெ.சம்பத்

கந்தன் தான் கட்டிய வீட்டில் குடியேறி விளையாட்டாக பத்து வருடங்கள் உருண்டோடி விட்டது. வீட்டைச் சுற்றிலும் தேவையான மரங்களையும் காய்கறிதோட்டங்களையும் பூச்செடிகளையும் அடைசலாக இல்லாமல் தகுந்த இடைவெளியில் விட்டு பயிரிட்டு வளர்த்து வந்தார். மரம் செடி இவைகளின் நடுவில் நல்ல மணற்பாங்கான பகுதி இருக்கும் படி அமைத்திருந்தார். காலையில் மரம் செடி இவைகளுக்கு தண்ணீர் விட கந்தன் தவறுவதில்லை. மகன் பூவரசன் விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவி செய்வான். இவர் வீட்டிற்கு காற்றோட்டமாக இருக்கும்படி மரங்களை வளர்த்தாலும் […]

Loading

சிறுகதை

கௌரவ முனைவர் பட்டம் – மு.வெ.சம்பத்

குப்புசாமி பல நாட்களாக பல வேலைகள் செய்து வந்தாலும் நிரந்தரமான வேலையில் அமர முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் வலம் வந்தார். கடைசியில் புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு பணி கிடைத்ததும் மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். முதலில் சில நாட்கள் நோயாளிகள் படும் வேதனை கண்டு மிகவும் கவலையில் ஆழ்ந்தார். உடன் பணி புரியும் கந்தன் அவர்களைப் பார்த்தால் மிகவும் மன வேதனை தான். நீ உன்வாழ்க்கையை நடத்த வேண்டுமென்றால் வேலையில் கவனம் செலுத்து என்றார். கந்தன் கூறியதில் […]

Loading

சிறுகதை

கிராம நேசம் – மு.வெ.சம்பத்

மதன்குமார் தனது மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்தைப் பற்றி சிறு வயது முதலே அவனது அப்பா கோவிந்தனிடம் கேட்டுத்தெரிந்து கொண்டார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொந்த கிராமத்துக்கு சென்று வருவார். அவனது அப்பா கோவிந்தன் எங்கள் மூதாதையர் நிலங்களை எல்லாம் நான் விற்கவில்லை. அங்குள்ள ஒருவர் மூலம் விவசாயம் செய்து பாதுகாத்து வருகிறேன் என்பார். கோவிந்தன் வேலை நிமித்தமாக வெளியூர் வந்தது தங்கி விட்டதால் அவருக்கு கிராம வாழ்க்கைப் பயணம் அற்றுப் போனது. கோவிந்தன் மதன் குமாரைப் பார்த்து […]

Loading

சிறுகதை

என்னைப் பார் – மு.வெ.சம்பத்

அந்த சலவைத் தொழிலாளி இரண்டு கழுதைகள் வளர்த்து வந்தான். ஆற்றங்கரைக்கு துணிகளை எடுத்தச் செல்ல அவைகளை பயன்படுத்தவான். இரண்டு கழுதைகளும் பக்கத்துக்குப் பக்கமாகச் செல்லும். காலையில் அவைகளுக்கு தீனி போட்டு விட்டுத் தான் அழுக்குத் துணிகளை அதன் மேல் ஏற்றுவான். சில சமயம் அதிகமாகவும். சில சமயம் மிதமாகவும் துணிகள் ஏற்றபட்டு இருக்கும். ஆற்றங்கரை வந்ததும் அவற்றை இறக்கி வைத்து விட்டு கழுதைகளை அங்கு சுதந்திரமாக திரிய விடுவான். கழுதைகள் எல்லைக் கோட்டைத் தாண்டாத வண்ணம் அடிக்கடி […]

Loading

சிறுகதை

துணைவியின் துணை – மு.வெ.சம்பத்

ஆனந்தன் பிரியாவை கை பிடித்து இன்றொடு நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. பணியிலிருந்து ஓய்வு பெற்று விளையாட்டாக ஐந்து வருடங்கள் நில்லாது சென்றன. ஆனந்தன் தனது மூத்த பையனை தனது நண்பன் ஆலோசனைப்படி படிக்க வைத்து அவனை பணிக்காக அமெரிக்காவிற்கு அனுப்பினார். தனது மகளை தனது சொந்தக்காரப் பையனுக்கு விமரிசையாகவே திருமணம் செய்து வைத்தார். ஆனந்தன் மகன் சுதர்சனுக்கு தனது நண்பன் கருப்பசாமியின் அறிவுரைப்படி அவர் தேர்ந்தெடுத்த பெண்ணை மணம் முடித்தார். இருவரும் தற்போது அமெரிக்காவில் உள்ளார்கள். […]

Loading

சிறுகதை

கூறியது அப்பாவா – மு.வெ.சம்பத்

சாந்தன் தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையிடம் அடிக்கடிக் கூறுவது என்னவென்றால் தலைவலி, காய்ச்சல், இருமல், வயிற்று வலி, கால்வலி, ஜலதோஷம், சுளுக்கு போன்ற அசௌகரியங்களுக்கு உடனே மருத்துவரை நாடாமல், நம்மில் பலர் உங்களையும் சேர்த்துத் தான் மருத்துவர் ஆலோசனையைப் பெறாமல் சில மருந்துகளை தாங்களாகவே கேள்விப்பட்டது அல்லது ஒரு தடவை உபயோகித்து பலன் அடைந்ததை அல்லது மருந்துக் கடையில் சென்று அசௌகரியத்தைச் சொல்லி மாத்திரைகள் வாங்கும் பழக்கம் தவறானது தான் என்றான். சில மாத்திரைகள் மூலம் […]

Loading

சிறுகதை

அந்த வடை கிறக்கம் – மு.வெ.சம்பத்

நந்தன் மற்றும் அவர் மனைவி பெரிய நாயகி இருவரும் தங்களது பையனுக்கு பெண் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தார்கள். சில உறவினர்கள் வருகைக்காக காத்திருந்தார்கள். வாசலில் வாகனம் வரும் சப்தம் கேட்டு நந்தன் வாசலுக்கு விரைந்து சென்றார். வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்தார். பெரிய நாயகி வந்தவர்களுக்கு சூடாக பானம் தந்து விட்டு போகலாமா என்றார். வந்தவர்களில் ஒருவர் அங்கு நாமெல்லாரும் பேச வேண்டாம். ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் நந்தனிடம் சொல்லி விடுவோம் என்றார். நந்தன் பையன் […]

Loading