சென்னை, ஜன. 29– “தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது குடியரசு தின உரையில் “தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, “தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என்கிற பெயரில் தலையங்கம் வெளியிட்டு ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. […]