செய்திகள்

2026–ம் ஆண்டு தேர்தலில் 7வது முறையாக மீண்டும் தி.மு.க. ஆட்சி தான்:

முதல்வர் ஸ்டாலின் உறுதி சென்னை, ஏப்.29– இதுவரை தமிழ்நாட்டில் செயல்படுத்தி இருக்கும் திட்டங்களால், செய்திருக்கக்கூடிய சாதனைகளால் வரும் 2026–ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் 7வது முறையாக தி.மு.க. ஆட்சி தான் அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியுடன் கூறினார். ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொற்காலம் விரைவில் தொடங்கப் போகிறது என்றும் முதல்வர் பெருமிதத்துடன் கூறினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பாராட்டுவிழா

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் சென்னை, ஏப்.26– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நான் முதல்வன்” திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். அதிகாரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்; பல பேருக்கு நீங்கள் ரோல் மாடலாக […]

Loading

செய்திகள்

முதல்வரின் வீடு மறு கட்டுமானம் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும்:

விழுப்புரம், ஏப்.17- முதல்-அமைச்சரின் வீடு மறு கட்டுமானம் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி […]

Loading

செய்திகள்

முதல்வர் பதவி விலக பதாகை காட்டிய 7 அ. தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட்

சென்னை, ஏப்.7– சட்டசபையில், முதல்வர் பதவி விலக வலியுறுத்தும் பதாகையை காட்டியதால், அவையில் இருந்து 7 அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டசபையில் இன்று சபை விதிப்படி அனுமதியளிக்க முடியாத ஒரு விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முயன்றதால், அவரையும் அவரது கட்சி உறுப்பினர்களையும் ஒரு நாள் சட்டசபையிலிருந்து வெளியேற்றி சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுத்தார். இன்று சபைக்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரும், அண்ணா தி.மு.க. உறுப்பினர்களும் பல்வேறு கோரிக்கைகளை அச்சிட்ட […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

சென்னை, பிப் 24– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மத்திய அரசு என்று சொல்லிக்கொள்ளும், ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும், அந்த நெருக்கடிக்களுக்கு மத்தியிலும், அது பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டு நலன்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் மேல் நம்பிக்கை […]

Loading

செய்திகள்

‘உங்களுக்கு திமிர்’; முதல்வருக்கு ஆணவம் என்று கூறிய கவர்னருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

சென்னை, ஜன.13-– முதல்வருக்கு ஆணவம் என்று கூறிய கவர்னருக்கு, இன்று கவர்னருக்கு திமிர் என்று அமைச்சர் துரைமுருகன் காட்டமாக கூறியுள்ளார். சட்டசபை விவகாரத்தில் கவர்னர் மாளிகை மீண்டும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 6-–ந் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் படிக்கவில்லை என்பதை காரணமாக கூறி, உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் எக்ஸ் தளத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. […]

Loading

செய்திகள்

நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் : அலுவலர்களுடன் சேகர்பாபு கலந்தாய்வு

சென்னை, டிச 20– தாளமுத்து நடராசன் மாளிகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 2024–-2025–ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதிய நிலை குறித்தும் சி.எம்.டி.ஏ. சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் (பகிர்ந்த பணியிடம் மற்றும் கல்வி மையம்) அமைப்பது தொடர்பாகவும், சாலை சந்திப்பு மேம்பாடுகள் மற்றும் சுரங்க பாதைகளை அழகுபடுத்துதல் தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னர் சேகர்பாபு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சாதனைகள் அடங்கிய ‘‘காபி டேபிள்’’ புத்தகத்தை வெளியிட்டார். இக்கூட்டத்தில் […]

Loading

செய்திகள்

குவைத்தில் காணாமல் போன திருத்தணி இளைஞர் பத்திரமாக மீட்பு

முதல்வர், அமைச்சருக்கு குடும்பத்தினர் நன்றி திருவள்ளூர், டிச. 12– திருவள்ளூர் சுற்றுலா மாளிகையில் திருத்தணி இஸ்லாம் நகரை சேர்ந்த காஜிஅலி குவைத்தில் பத்திரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர்கள் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் டாக்டர்.த. பிரபு சங்கர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்கள். பின்னர் அமைச்சர் சா.மு.நாசர் கூறுகையில், […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே

மும்பை, நவ. 26– மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று தனது பதவியை ராஜினமா செய்தார். ராஜ்பவனில் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க., சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா […]

Loading

செய்திகள்

2026-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

கோவை, நவ.6-– மக்களின் வரவேற்பே சாட்சியாக இருப்பதால் 2026–-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என்று கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாலையில் கோவை போத்தனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர் […]

Loading