செய்திகள்

பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குப்பதிவு: முதலமைச்சர் சொன்னதே உண்மை

சபாநாயகர் தீர்ப்பு சென்னை, ஜன. 11– பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குபதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மை என சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை […]

Loading

Uncategorized

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மரணம்

ஸ்டாலின் இரங்கல் புதுச்சேரி, டிச.9- புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் (வயது 91). உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் மரணம் அடைந்தார். மடுகரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஏராளமானபேர் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலம் […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடி முன்னிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சராக பட்னாவிஸ் பதவி ஏற்றார்

ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் துணை முதலமைச்சர் ஆனார்கள் மும்பை, டிச.6- பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த பிரமாண்ட விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் பதவி ஏற்றனர். மும்பை ஆசாத் மைதானத்தில் பதவி ஏற்பு விழா பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் 40 ஆயிரம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு […]

Loading

செய்திகள்

வெள்ள சேத பாதிப்புகளை கணக்கிட மத்திய குழுவை உடனே அனுப்புங்கள்

டெலிபோனில் பேசிய மோடியிடம் ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, டிச.3– புயல் வெள்ள சேதங்களை பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் பெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு […]

Loading

செய்திகள்

1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, டிச.3-– புயல் மழையால் 1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், கணக்கெடுப்பு முழுமையாக நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் வழங்கப்படும் என்றும் விழுப்புரம் வெள்ளச்சேதத்தை பார்வையிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். பெஞ்ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக் கணக்கான வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் பயிர்கள் பெருமளவு சேதமடைந்தன. […]

Loading

செய்திகள்

இந்தி மொழி பேசப்படாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும்

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, அக்.19- இந்தி மொழி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து, 18-ந்தேதி (நேற்று) நிறைவடையும் இந்தி மாத நிறைவு விழா நடத்தப்படுவதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த விழாவிற்கு தமிழக கவர்னர் தலைமை தாங்குகிறார். எந்த […]

Loading

செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து சென்னை, செப். 25– ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் 3 வீரர், வீராங்கனைகள் மற்றும் அணி தலைவர் ஆகியோருக்கு ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தினார். விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி […]

Loading

செய்திகள்

இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை சென்னை, செப்.20-– இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில தலைவர் ஆர்.அப்துல் கரீம், மாநில பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், பொருளாளர் ஏ.இப்ராஹீம், மாநிலச் செயலாளர் ஐ.அன்சாரி, மேலாண்மைக் குழு தலைவர் ஷம்கல்லுஹா ரஹ்பானி, தணிக்கை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் ஆகியோர் நேற்று […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார்: பொதுமக்களிடம் மம்தா ஆவேசம்

கொல்கத்தா, செப். 13– முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று பொதுமக்களிடம் பேசிய மம்தா ஆவேசமாக கூறினார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் 8 ந்தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சஞ்சய் ராய் என்பவர் கைது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் வர்த்தகம்

ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் உயர் அலுவலர்களை சந்தித்தார் மு.க. ஸ்டாலின்

சிகாகோ, செப்.11 ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10–ந் தேதி) அமெரிக்க நாட்டின் சிகாகோவில், உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், […]

Loading