செய்திகள்

எடப்பாடியை மீண்டும் முதலமைச்சராக்குவோம்: பாசறை மாநாட்டில் சூளுரை

வேலூர், பிப்.17– தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோத போக்கை மக்களிடம் எடுத்து சொல்வோம். மீண்டும் எடப்பாடி தலைமையில் அண்ணா தி.மு.க. ஆட்சியை அமைப்போம் என்று வேலூரில் நடந்த இளைஞர் பாசறை மண்டல மாநாட்டில் சூளுரைக்கப்பட்டது. வேலூரில் இளைஞர்கள்‌ மற்றும்‌ இளம்‌ பெண்கள்‌ பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.வி.பி. பரமசிவம் தலைமையில் நடந்தது. மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு வரவேற்றார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– போதைப்‌பொருள்‌ பயன்பாடுகளும்‌, கள்ளச்சாராயம்‌ மரணங்களும்‌, பெண்‌ குழந்தைகளுக்கு […]

Loading

செய்திகள்

3 மாதத்தில் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை

சென்னை, பிப்.15-– ‘‘இன்னும் 3 மாதத்தில் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி கூறினார். இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கும் நிகழ்வு சென்னை கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தமு இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தவர், மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். விழாவில் […]

Loading

செய்திகள்

உத்தரகாண்டில் இன்றுமுதல் பொது சிவில் சட்டம் அமல்

டேராடூன், ஜன. 27– உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வர உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 7 ந்தேதி நாட்டிலேயே முதல் மாநிலமாக, உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மாநில ஆளுநரும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்டமாக மாறியது. தற்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிவுற்ற […]

Loading

செய்திகள்

யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற 9 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜன.21-– யு.ஜி.சி.யின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 9 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து எனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறேன். வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள், மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன. […]

Loading

செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள்

சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு இந்த ஆண்டு 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் ‘தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்குவேன்’ சென்னை, ஜன.11– பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் அளித்த புகார்கள், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும் பதிலளித்து பேசினார். […]

Loading

செய்திகள்

பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குப்பதிவு: முதலமைச்சர் சொன்னதே உண்மை

சபாநாயகர் தீர்ப்பு சென்னை, ஜன. 11– பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குபதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மை என சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை […]

Loading

Uncategorized

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மரணம்

ஸ்டாலின் இரங்கல் புதுச்சேரி, டிச.9- புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் (வயது 91). உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் மரணம் அடைந்தார். மடுகரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஏராளமானபேர் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலம் […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடி முன்னிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சராக பட்னாவிஸ் பதவி ஏற்றார்

ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் துணை முதலமைச்சர் ஆனார்கள் மும்பை, டிச.6- பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த பிரமாண்ட விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் பதவி ஏற்றனர். மும்பை ஆசாத் மைதானத்தில் பதவி ஏற்பு விழா பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் 40 ஆயிரம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு […]

Loading

செய்திகள்

வெள்ள சேத பாதிப்புகளை கணக்கிட மத்திய குழுவை உடனே அனுப்புங்கள்

டெலிபோனில் பேசிய மோடியிடம் ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, டிச.3– புயல் வெள்ள சேதங்களை பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் பெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு […]

Loading

செய்திகள்

1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, டிச.3-– புயல் மழையால் 1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், கணக்கெடுப்பு முழுமையாக நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் வழங்கப்படும் என்றும் விழுப்புரம் வெள்ளச்சேதத்தை பார்வையிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். பெஞ்ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக் கணக்கான வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் பயிர்கள் பெருமளவு சேதமடைந்தன. […]

Loading