சென்னை, ஏப். 13– சமூக நீதி காவலர் பி.பி.மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:– பி.பி.மண்டல் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். சமூக நீதியின் முன்னோடி, ஓ.பி.சி.க்களுக்கு கட்டமைப்பு ரீதியாக வாய்ப்பு மறுக்கப்படுவதை அவரது ஆணையம் அம்பலப்படுத்தியது. நாடு அதை அங்கீகரிப்பதற்கு முன்பே, திராவிட இயக்கம் […]