செய்திகள்

பி.பி.மண்டலின் சமூகநீதி பார்வையை உறுதியாக செயல்படுத்துவோம்: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சென்னை, ஏப். 13– சமூக நீதி காவலர் பி.பி.மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:– பி.பி.மண்டல் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். சமூக நீதியின் முன்னோடி, ஓ.பி.சி.க்களுக்கு கட்டமைப்பு ரீதியாக வாய்ப்பு மறுக்கப்படுவதை அவரது ஆணையம் அம்பலப்படுத்தியது. நாடு அதை அங்கீகரிப்பதற்கு முன்பே, திராவிட இயக்கம் […]

Loading

செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை, மார்ச் 26– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தன் செய்தியில் கூறியிருப்பதாவது:– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கருப்பசாமி பாண்டியன் 1977–ல் ஆலங்குளம், 1980–ல் பாளையங்கோட்டை, 2006-–ல் தென்காசி தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார். நீண்டகாலம் அவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாடு […]

Loading

செய்திகள்

தைரியமில்லாமல் ஓடுவதா? அ.தி.மு.க. உறுப்பினர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

சென்னை, மார்ச் 20– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டம் -ஒழுங்கு தொடர்பான பிரச்சினையை இன்று எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பி, அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய முற்பட்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:– “தூத்துக்குடியில் நடந்த சம்பவம், சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் போன்றவற்றையெல்லாம் நீங்கள் மறந்துவிடக் கூடாது. உங்களைப் பொறுத்தவரையில், டி.வி-யைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. தைரியம் இருந்தால், நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு அவர்கள் போக வேண்டும். […]

Loading

செய்திகள்

எழுத்தாளர் நாறும்பூநாதன் மரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

திருநெல்வேலி, மார்ச் 17– தமிழக அரசின் உ.வே.சா., விருது பெற்ற எழுத்தாளர் நாறும்பூநாதன் (வயது 66) நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். துாத்துக்குடி மாவட்டம் கழுகு மலையில் பிறந்து கோவில்பட்டி ஜி.வி.என். கல்லுாரியில் பயின்றவர் நாறும்பூநாதன். பாரத ஸ்டேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர். சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், இலக்கியக் கூட்டங்கள், வலைத்தள பணிகளில் சிறப்பாக செயல்பட்டார். ”கனவில் உதிர்ந்த பூ” எனும் அவரது நுால் கல்லுாரி ஒன்றில் பாடமாக […]

Loading

செய்திகள்

அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை, பிப்.21-– ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை 19–ந் தேதி அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்ட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ஒன்றிய […]

Loading

செய்திகள்

ஈரநிலங்களை பாதுகாப்பதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சென்னை, பிப்.2– இன்று உலக ஈரநிலங்கள் நாள். இதை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– உலக ஈரநிலங்கள் நாளான இன்று, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியைப் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக 20 -ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 19 இடங்கள் நாம் 2021–ல் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடங்கியதற்குப் […]

Loading

செய்திகள்

திருவள்ளுவர் திருநாள் விருதுகள் அறிவிப்பு: 15-ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை, ஜன.5-– திருவள்ளுவர் திருநாள் விருதுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி வழங்க உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளை கொண்டு, சீர் இளமையோடு விளங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருது களையும், சிறப்புகளையும் அளித்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்

வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் வழங்கினார் சென்னை, டிச.9– தி.மு.க.வுக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது வி.சி.க. சார்பில் திரட்டப்பட்ட ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியை முதலமைச்சரிடம் திருமாவளவன் அளித்தார். முன்னதாக வி.சி.க. சார்பில் எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளமும், எம்.பி.க்களின் 2 மாத சம்பளமும் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Loading

செய்திகள்

நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

திரையுலகினர் அஞ்சலி முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் சென்னை, நவ. 10– வயது முதிர்வு காரணமாக நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. டெல்லி கணேஷ் உடலுக்கு உறவினர்கள் மற்றும் திரை உலகினர், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறை சாலை விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை, அக்.28 மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரி, சுந்தரப்பன்சாவடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– மயிலாடுதுறை மாவட்டம், பாகசாலை காவல் நிலையத்திலிருந்து அயல் பணியாக மயிலாடுதுறை மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்துவந்த காவலர் பரந்தாமன் (வயது 39) என்பவர் நேற்று (27–ந் தேதி) பிற்பகல் சுமார் 2 மணியளவில் பணி முடிந்து இருசக்கர […]

Loading