செய்திகள்

இலங்கை அரசு கைது செய்த மீனவர்கள் !

சென்னை, மே.6-– இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், 229 மீன்பிடிப் படகுகளையும் மீட்டுக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த நபர்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மே 2-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள் மற்றும் […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்கு

வேதாரண்யம், ஏப். 18– மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டையில் இருந்து கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஜெகன் (வயது 36), ராமகிருஷ்ணன் (67), செந்தில் (46), சாமுவேல் (31) ஆகியோர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது, நாகை மாவட்டம், கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 5 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 […]

Loading

செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம், ஏப். 17– கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 4 பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, புதுப்பேட்டையை சேர்ந்த தமிழக மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் என 4 பேர் விசைப் படகுகளில் மீன் வளம், மீனவர் நலத் துறையினரிடம் அனுமதி பெற்று நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளைர்கள் மீனவர்களை […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்

நாளை தீக்குளிப்பு போராட்டம் அறிவிப்பு ராமேஸ்வரம், மார்ச் 3– ராமேஸ்வரம் மீனவர்கள் திருவோடு எந்தி போராட்டம் நடத்தினர். நாளை தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படுமு் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மீனவர்களின் விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்வதால், மீனவர்களின் வாழ்வாதாரதமும் பாதிப்படைந்து வருகிறது. மீனவர்களை விடுவிக்கக் கோரி இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அழுத்தம் தர […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள 13 மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கடிதம்

பாண்டிச்சேரி, ஜன 28 காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், பறிமுதல் செய்திருக்கும் படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கும், வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் புதுவை முதல்வர் என் ரங்கசாமி கடிதம் எழுதி இருக்கிறார். இதே போல எம்.பியான பி. வைத்தியலிங்கமும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். கடற்படையினரின் தாக்குதலில் காரைக்காலைச் சேர்ந்த […]

Loading

செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் 29ம் தேதி கடலுக்கு செல்ல தடை

சென்னை, ஜன. 25– ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதால் வரும் 29ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள […]

Loading

செய்திகள்

பாஜக தனது இரட்டை நிலையை நிறுத்தி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உதவ வேண்டும்

பாஜக தலைவருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் சென்னை, ஜன. 23– பாஜக தனது இரட்டை நிலையை நிறுத்திக்கொண்டு, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– அண்ணாமலைக்கு எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல், அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது. அண்டை நாடான இலங்கையோடு நல்லிணக்கமும், நட்புறவும் இருக்க வேண்டுமென்ற […]

Loading

செய்திகள்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை, டிச. 21– நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்து வலை உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கோடியக்கரையில் ஏராளமான மீனவர்கள் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். அந்தவகையில் அக்கரைப்பேட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு மூலம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த கண்ணன் […]

Loading

செய்திகள்

மீனவர்கள் சிறைபிடிப்பை பற்றி விவாதிக்க விஜய்வசந்த் எம்பி ஒத்திவைப்பு நோட்டீஸ்

டெல்லி, டிச. 16– மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி, காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்

ராமேஸ்வரம், டிச. 5– கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

Loading