செய்திகள்

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: சி.பி.எஸ்.இ புதிய முடிவு

புதுடெல்லி, ஆக. 11– 2026–27ம் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை சி.பி.எஸ்.இ. அறிமுகம் செய்கிறது. மத்திய இடை நிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்து இருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் […]

Loading

செய்திகள்

கூடுவாஞ்சேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் அதிரடி சோதனை; கஞ்சா சாக்லேட் பறிமுதல்

ஒருவர் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் தகவல் தாம்பரம், ஜூலை 28– கூடுவாஞ்சேரியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5,250 கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது என தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் கூறினார். தாம்பரம் காவல் துறை கமிஷனர் அபின் தினேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூடுவாஞ்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள பகுதிகள், வீடுகள், கடைகள், ஓட்டல்களில் 100 போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். போலீசார் சோதனையில் கஞ்சா சாக்லேட்டுகள், குட்கா உள்ளிட்டவற்றை போலீசார் […]

Loading

செய்திகள்

ராஜஸ்தானில் அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி

பிரதமர் மோடி இரங்கல் ஜெய்ப்பூர், ஜூலை 25– ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசு தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் பள்ளியின் மேற்கூரை இடிந்து அங்கு அமர்ந்திருந்த குழந்தைகள் மீது விழுந்துள்ளது. அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் […]

Loading

செய்திகள்

டெல்லி, பெங்களூருவில் 85 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, ஜூலை 18– பெங்களூருவில் 40 பள்ளிகளுக்கும், புதுடெல்லியில் 45 பள்ளிகளுக்கும் (மொத்தம் 85 பள்ளிகள்) மர்ம நபர்கள் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களாக புதுடெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இன்று 45 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “வணக்கம். பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்கள் வைத்துள்ளேன் என்பதை […]

Loading

கடலூரில் பள்ளி வாகனத்தில் ரயில் மோதி விபத்து
செய்திகள்

பள்ளி வேன் மீது ரெயில் மோதி 2 மாணவர்கள் பலி

ரெயில் கேட் மூடாமல் விடப்பட்டதால் விபரீதம் கடலூர், ஜூலை 8- கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 2 மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது. இந்நிலையில், பள்ளி வேன் […]

Loading

செய்திகள்

உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கண்டுபிடிப்புக்கு குவியும் பாராட்டுக்கள்

உடுமலை, ஜூன் 5– உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கு.பாஸ்கர் மற்றும் வாகன மோட்டார் ஆய்வாளர் வை.சக்திவேல் உடுமலை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய‌ கம்மியர் மோட்டார் வண்டி தொழில் பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அரசினர் ஐடிஐ பயிற்சியாளர்கள் பேச்சிமுத்து கதிரேசன் ஆகியோர் கண்டுபிடித்த நெக்ஸ்ஜென் வெகிகில் டிவைசை இயக்கி காட்டி […]

Loading

செய்திகள்

மாணவர்களுக்கு பாடநூல், சீருடை, நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூன் 2– 2025–-26–ம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2025–-26–ம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்

சென்னை, ஜூன் 2– கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு முதல் நாளே பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. 2025–26ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ–மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி (அதாவது இன்று) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் […]

Loading

செய்திகள்

‘நீட்’ தாண்டியும் உலகம் இருக்கு: மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

சென்னை, மே 30– “நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு, அது ரொம்ப பெருசு” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, காசுக்காக ஓட்டுப்போடும் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில் சட்டசபை தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை இன்று தமிழக […]

Loading

செய்திகள்

தக்கர் பாபா வித்யாலயாவில் தொழிற் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1,79,000 ஊக்கத்தொகை

சென்னை, மே 28– தக்கர் பாபா வித்யாலயாவில் தொழிற்பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு, பணியிடப் பயிற்சி (Internship) ஊதியமாக புளுஸ்டார் நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தியால் 1946-ல் தொடங்கப்பட்ட, சென்னையின் புகழ்பெற்ற காந்திய நிறுவனமான தக்கர் பாபா வித்யாலயா தியாகராயர் நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு, தொழிற்பயிற்சி பெறும் மாணவர்கள், பணியிடப் பயிற்சிக்காக தொழில் நிறுவனங்களுக்கு செல்வது தொழிற்பயிற்சியின் ஓர் அங்கம். அந்த வகையில், தொழில் நிறுவனங்களில் […]

Loading