செய்திகள்

தேர்வு பயம்: டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!

புதுடெல்லி, டிச. 22– டெல்லி ரோகினி பகுதியில் கடந்த வாரம் இ-மெயிலில் 2 பள்ளிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் அந்தப் பள்ளியின் மாணவர்களே என டெல்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். டெல்லி சிறப்பு காவல்படையினர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை செய்தபோது, அவை அந்தந்த பள்ளிகளில் படிக்கும் இரு மாணவர்களால் விடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இரு மாணவர்களும் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்தி வைப்பதற்காக இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரையும் […]

Loading

செய்திகள்

காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிப்பு

திட்டக்குழு ஆய்வில் தாக்கல் சென்னை, டிச.17– “முதலமைச்சரின் காலை உணவு” திட்டத்தினால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு, “புதுமைப்பெண்” திட்டத்தால் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 27.6%, விவசாயம் அல்லாத குடும்பங்களைச் சார்ந்தவர்கள் 39.3% கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என மாநில திட்டக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில திட்டக்குழு, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”, ”புதுமைப்பெண் திட்டம்” “எண்ணும் எழுத்தும் திட்டம்” முதலான சீரிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. மாநிலத் திட்டக் குழுவின் மூலம் […]

Loading

செய்திகள்

வெறுப்புணர்ச்சி காரணமாக கனடாவில் ஒரே வாரத்தில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை

ஒட்டாவா, டிச. 16– கனடாவில் ஒரே வாரத்தில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெறுப்பு உணர்ச்சி காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெறுவதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஆண்டு ஜூனில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ரூடோ குற்றஞ்சாட்டினார். இதை மத்திய அரசு மறுத்தது. காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு […]

Loading

செய்திகள்

வங்கதேச அதிபர் பதவி விலக கோரி மீண்டும் மாணவர்கள் போராட்டம்

டாக்கா, அக். 23– வங்கதேசத்தின் அதிபர் முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், தற்போது புதிய அதிபருக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகலில் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவி விலக வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Loading

செய்திகள்

கன்னியாகுமரி தனியார் மருத்துவ கல்லூரியின் 100 எம்.பி.பி.எஸ். இடங்களை திரும்ப பெற்றது

சென்னை, ஆக.31- கன்னியாகுமரியில் இயங்கும் தனியார் மருத்துவக்கல்லூரியின் 100 இடங்களை, தேசிய மருத்துவ ஆணையம் திரும்ப பெற்றது. இந்த கல்லூரியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த 5 மாணவர்களுக்கு வேறு கல்லூரிகளில் ‘சீட்’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான 2024–-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, அரசு ஒதுக்கீடுக்கான பொதுப்பிரிவு தரவரிசை பட்டியலில் ஒன்று […]

Loading

செய்திகள்

கஞ்சா வேட்டை : 30 மாணவர்கள் கைது

செங்கல்பட்டு, ஆக. 31– பொத்தேரியில் போலீசார் நடத்தி அதிரடி கஞ்சா வேட்டையில் கல்லூரி மாணர்வகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு […]

Loading

செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: திருச்சி என்ஐடி கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

திருச்சி, ஆக. 30– மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருச்சி என்ஐடி கல்லூரி மாணவர்கள் விடிய விடிய நடத்திய போராட்டம் நடத்தினர். மாவட்ட எஸ்.பி. பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் முடிவுக்கு வந்தது. திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி […]

Loading

செய்திகள்

மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

புதுடெல்லி, ஆக. 29– இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் பரவும் ‘‘தொற்றுநோய்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை மாநாடு ஒன்றில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையில், நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 சதவிகிதம் அதிகரிப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களை மட்டும் கணக்கில் கொண்டால் கடந்தாண்டைவிட 4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுதோறும் தற்கொலை செய்து […]

Loading

செய்திகள்

3 மாணவர்கள் உயிரிழப்பு எதிரொலி: டெல்லியில் விதிகளை மீறிய 13 பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி சீல்

புதுடெல்லி, ஜூலை 29– திடீர் வெள்ளத்தில் சிக்கி டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக டெல்லி பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ள மேலும் 13 பயிற்சி மையங்களுக்கு சட்டவிரோதமாக இயங்கியதாகக் கூறி மாநகராட்சி சீல் வைத்துள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக டெல்லியில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்துக்குள் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்குதான் பயிற்சி மையத்தின் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால், அங்கு […]

Loading

செய்திகள்

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குடும்பத்தினரின் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு

மாணவர்களின் போராட்டத்தில் 32 பேர் பலி டாக்கா, ஜூலை 19– வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 32 பேர் பலியாகி உள்ள நிலையில் 2500 பேர் காயமடைந்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான வங்கேதசத்தின் பிரதமராக இருப்பவர் ஷேக் ஹசீனா. வங்கதேசத்தை பொறுத்தவரை அரசு பணிகளில் முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. […]

Loading