செய்திகள்

கோடை வெப்பம் தணிந்ததால், மக்கள் நிம்மதி சென்னையில் பலத்த காற்றுடன் மழை: மேடவாக்கத்தில் 12 செ.மீ. பதிவு

சென்னை, ஏப். 16– சென்னையில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழைக் கொட்டியது. மேடவாக்கத்தில் சுமார் ஒரு மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதேபோல வளசரவாக்கம், சாலிகிராமம், நெற்குன்றம் பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வந்தது. பகல் நேரங்களில் வெளியே தலைகாட்ட […]

Loading

செய்திகள்

வடகிழக்குப் பருவ மழை விலகியது: தமிழகத்தில் இயல்பைவிட 33% அதிக மழை பொழிவு

வானிலை மையம் அறிவிப்பு சென்னை, ஜன. 26– கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து இன்றுடன் விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில், 117 செ.மீ. மழை பெய்தது. இது 2023ம் ஆண்டைவிட 15 சதவீதம் அதிகம். வடகிழக்கு […]

Loading

செய்திகள்

54 செ.மீ. மழை: வெள்ளத்தில் மிதக்கும் திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குடியிருப்புகளில் நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி நெல்லை, டிச. 13– திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அம்பை – 36 செ.மீ.,காக்காச்சி – 35 செ.மீ., மாஞ்சோலை – 32 செ.மீ., […]

Loading

செய்திகள்

மழை பாதிப்பை சமாளிப்போம்: ஸ்டாலின் உறுதி

சென்னை, டிச.13– மழை வெள்ள பாதிப்பை சமாளித்து நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். கேள்வி: தென் மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? முதலமைச்சர் பதில்: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது. அதற்கு ஏற்கனவே […]

Loading

செய்திகள்

மழை பாதிப்புகளை விரைவாக சீரமைத்திட அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை, டிச.2– பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீரமைத்திட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– பெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தைத் தொடர்பு கொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை […]

Loading

செய்திகள்

சென்னையில் பலத்த காற்றுடன் இடைவிடாது மழை: 12 செ.மீ. பதிவு

சென்னை, நவ. 30– சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் பெய்ய தொடங்கிய மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்ட்ரல், கிண்டி, அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது. அரசு பஸ்கள் தவிர மற்ற வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர […]

Loading

செய்திகள்

மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்

மதுரை, நவ. 28– மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் புதன்கிழமை இரவு சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக, கோரிப்பாளையத்தில் தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை ரூ.190 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு அந்த பகுதியில் இரும்பு சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென இரும்பு சாரம் பாரம் தாங்கமால் சரிந்து […]

Loading

செய்திகள்

சென்னை அருகே ஃபெங்கல் புயல் மையம் கொள்ளும்: 15 மாவட்டங்களில் மழை வாய்ப்பு

இந்திய வானிலை மையம் தகவல் டெல்லி, நவ. 27– ஃபெங்கல் புயல் 30 ந்தேதி சென்னைக்கு மிக அருகில் 30 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொள்ளும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஃபெங்கல் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஃபெங்கல் புயல் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று […]

Loading

சிறுகதை

மதுரையில் மழை..! – ராஜா செல்லமுத்து

வங்கக்கடலில் உருவான புயல் மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சென்னையைச் சுற்றியுள்ள ஊர்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் ஒப்புதல் அளித்தது .ஏற்கனவே மழையால் பயந்து வாழ்ந்து கொண்டிருந்த சென்னை மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் வயிற்றில் புளியைக் கரைத்தது. நான்கு நாட்களுக்கு மேல் மழை நீடிக்கும் என்பதால் தாழ்வான பகுதியில் இருந்த மக்கள் எல்லாம் வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்தார்கள். இருசக்கர வாகனங்களையும் கார்களையும் பாலத்தின் மேல் நிறுத்தினார்கள் ” இங்கே […]

Loading