சென்னை, ஏப். 16– சென்னையில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழைக் கொட்டியது. மேடவாக்கத்தில் சுமார் ஒரு மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதேபோல வளசரவாக்கம், சாலிகிராமம், நெற்குன்றம் பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வந்தது. பகல் நேரங்களில் வெளியே தலைகாட்ட […]