செய்திகள்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு: 16 மாவட்டங்களில் இன்று மழை

சென்னை, நவ. 23: ‘தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில், 16 மாவட்டங்களில், இன்று மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் 12 செ.மீ., மழை பெய்தது. […]

Loading

செய்திகள்

நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் மூடல்

ஊட்டி, ஆக. 5– நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று ஒருநாள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்கள் […]

Loading

செய்திகள்

மழைக்காலக் கூட்டத்தொடர்: சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை

புதுடெல்லி, ஜூலை 20– நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் கூட்டத் தொடர் முழுவதும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்துக் […]

Loading

செய்திகள்

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி : 22 ந்தேதி வரை மழை

சென்னை வானிலை மையம் தகவல் சென்னை, மே 18– அரபிக்கடல் பகுதியில் 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும் எனவே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. நேற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. காவிரி […]

Loading

செய்திகள்

கோடை வெப்பம் தணிந்ததால், மக்கள் நிம்மதி சென்னையில் பலத்த காற்றுடன் மழை: மேடவாக்கத்தில் 12 செ.மீ. பதிவு

சென்னை, ஏப். 16– சென்னையில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழைக் கொட்டியது. மேடவாக்கத்தில் சுமார் ஒரு மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதேபோல வளசரவாக்கம், சாலிகிராமம், நெற்குன்றம் பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வந்தது. பகல் நேரங்களில் வெளியே தலைகாட்ட […]

Loading