புதுடில்லி, ஏப்.22– கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், வயது 88, இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் நேற்று காலமானார். […]