செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

சாதிவாரி கணக்கெடுப்பு

தலையங்கம் இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த உள்ளது. கேள்வி என்னவென்றால் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோடி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது என்பதுதான். கேள்வி என்னவென்றால், இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோடி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது என்பதுதான். சாதி என்பது இந்திய அரசியலில் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதை அறிவோம். கடந்த மாதம், குஜராத்தில் நடந்த இரண்டு […]

Loading

செய்திகள்

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு மத்திய அரசு அனுமதி

சென்னை, ஏப்.28-– தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு மத்திய எரிசக்தி துறை அனுமதி வழங்கி உள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) செயல்படுகிறது. நாட்டில் எரிவாயு இருக்கும் இடங்களை கண்டறிதல் மற்றும் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் 70 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் 84 சதவீதமும் […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதல் சம்பவம் – இந்திய ராணுவத்துக்கு எதிராக பொய் பிரச்சாரம்

16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை புதுடெல்லி, ஏப். 28– இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக செயல்பட்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசின் எக்ஸ் […]

Loading

செய்திகள்

தமிழ் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நந்தனம் அரசு கல்லூரியில் கலைஞர் கலையரங்கத்தை திறந்து வைத்தார் சென்னை, ஏப்.21-– ‘நீட்’, மும்மொழி கொள்கை என மத்திய அரசு தொந்தரவு கொடுத்து தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்’’ என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாகத் தாக்கினார். சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,000 இருக்கைககள் கொண்ட ‘கலைஞர் கலையரங்கம்’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டை சேர்ந்த 2,381 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.5.83 கோடி கல்வி உதவித்தொகை:

மத்திய அரசு வழங்கியது சென்னை, ஏப்.19- தமிழ்நாட்டை சேர்ந்த 2,381 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு ரூ.5.83 கோடி வழங்கி உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பை தொடருவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 9-ம் முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரத்து 600 வரையிலும், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.10,100 முதல் […]

Loading

செய்திகள்

இந்திய கடற்படைக்கு ரூ.64 ஆயிரம் கோடியில் 26 ரபேல் போர் விமானங்கள்

மத்திய அரசு ஒப்புதல் புதுடெல்லி, ஏப்.10- இந்திய கடற்படைக்காக ரூ.64 ஆயிரம் கோடியில் பிரான்சில் இருந்து 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. பிரான்ஸ் நாட்டு டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. சர்வதேச அளவில் சிறந்த தரமிக்க ரபேல் போர் விமானங்களை வாங்க உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.இந்தியாவும் இந்த விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது. இந்திய விமானப்படைக்காக 36 ரபேல் போர் விமானங்கள் […]

Loading

செய்திகள்

மத்திய அரசின் கேஸ் விலை உயர்வு ஏற்புடையதல்ல: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை, ஏப். 9– கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தி இருப்பதும், பெட்ரோல், டீசல் விலையினை குறைக்காமல் இருப்பதும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளதாக மத்திய அரசு மீது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சா எண்ணெய் உற்பத்திக்கேற்ப தேவை அதிகரிக்காததன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. “சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் […]

Loading

செய்திகள்

எம்.பி.க்களுக்கு இனி மாத சம்பளம் ரூ.1.29 லட்சம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச்.25- நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு சம்பளம் மற்றும் தினப்படி ஆகியவற்றை உயர்த்தி மத்திய அரசு அறிவித்து உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.பி.க்கள், மாதந்தோறும் ரூ.1 லட்சத்தை சம்பளமாக பெற்று வந்தனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் தினப்படியாக ரூ.2,000–-ம் பெற்று வந்தனர். இந்த சம்பளம் மற்றும் தினப்படியை மத்திய அரசு 24 சதவீதம் உயர்த்தி உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி […]

Loading

செய்திகள்

சந்திரயான்-–5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தகவல்

கன்னியாகுமரி, மார்ச்.18- சந்திரயான்-–5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: சந்திரயான்–5 திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து சில நாட்களுக்கு முன்னர்தான் பெற்றுள்ளோம். இந்த திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து நாங்கள் செயல்பட உள்ளோம். இது, சந்திரயான்–5 திட்டத்தின் அறிவியல் திறன்களை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 2023 ஆகஸ்ட் 23-ல் சந்திரயான்-–3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் எந்தவித சேதாரமும் […]

Loading

செய்திகள்

தேஜஸ், வந்தே பாரத் ரெயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை, மார்ச் 5– பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மீது பற்று இருப்பதாக பாஜக கூறுவது உண்மையெனில், ரெயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மும்மொழிக் கொள்கையால் தாய்மொழிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் […]

Loading