செய்திகள்

ஹஜ் பயண ஒதுக்கீடு குறைப்பு : மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, ஏப். 15– ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘இந்தியாவில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலமாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீடு திடீரெனக் குறைக்கப்பட்டிருப்பது பல்லாயிரக்கணக்கானோரைப் பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் உடனடியாக சவுதி அரசுடன் பேசி, இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் […]

Loading

செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: அமைச்சர் அஸ்வினி விளக்கம்

புதுடெல்லி, மார்ச் 27– ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம் என மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘ஆன்லைன் விளையாட்டுக்கு தடைவிதிக்கும் தார்மீக கடமையிலிருந்து மத்திய அரசு விலகி செல்கிறதா? அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு எவ்வளவு காலம் ஆகும்? ஆன்லைன் விளையாட்டுக்கு தமிழகம் தடைவிதித்துள்ளது’’ என்றார். […]

Loading

செய்திகள்

ரெயில்வே துறையில் மேலும் 1 லட்சம் பேர் நியமனம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி, மார்ச்.18-– ரெயில்வே துறையில் நிதி நிலை சிறப்பாக உள்ளது. ரெயில்வே துறையில் மேலும் 1 லட்சம் பேர் நியமிக்கப்படவுள்ளனர் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று ரெயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது ரெயில்வே துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து ரெயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் பேசியதாவது:- – ரெயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்கவில்லை என […]

Loading

செய்திகள்

ரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி

லண்டன், மார்ச். 6– பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் ‘திடீர்’ தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். காவலர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்தத் தாக்குதலை தடுத்து நிறுத்தினார்கள். இந்நிலையில் அமைச்சர் முன்னிலையில் தேசியக் கொடியை தீவிரவாதிகள் கிழித்தனர். இதனால்பரபரப்பு ஏற்பட்டது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் ஆறு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி […]

Loading

செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிரான மசோதா: விரைவில் ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும்

மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் நேரில் வலியுறுத்தல் புதுடெல்லி, மார்ச்.5-– கோவையில் புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும், நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வழங்கினார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிர மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-– மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி விவாதித்தோம். கோரிக்கைகள் தனித்தனியாக கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. […]

Loading

செய்திகள்

அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை, பிப்.21-– ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை 19–ந் தேதி அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்ட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ஒன்றிய […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்கள், மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டும்

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜன.13-– இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர் களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் […]

Loading

செய்திகள்

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில் பெட்டிகள்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு சென்னை , ஜன. 11– சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்ரித் பாரத் ரெயிலின் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களை பார்வையிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒவ்வொரு பெட்டியாக படுக்கைகள் மற்றும் இருக்கைகளில் ஏறியும், மின் விளக்குகள், பவர் சாக்கெட்டுகள் மற்றும் கழிவறைகள் என அனைத்தையும் ஆய்வு […]

Loading

செய்திகள்

பொங்கல் பண்டிகையில் வரும் யுஜிசி நெட் தேர்வை மாற்றி அமையுங்கள்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜன.7– தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16–ம் நாள் வரை யுஜிசி- நெட் தேர்வுகளை நடத்திட தேசியத் தேர்வு முகமையால் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவந்து அத்தேர்வுகளை வேறொரு நாளில் மாற்றியமைக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது […]

Loading

செய்திகள்

தி.மு.க. செயற்குழுவில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம்

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. செயற்குழுக் கூட்டம்” இன்று காலை 10 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதைக் கண்டித்து தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:– அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும், அடித்தட்டு மக்களின் குரலாக அரசியல் நிர்ணய […]

Loading