எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சென்னை, டிச.27-– மதுரை மாவட்டம், மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் நாடகமாடி, மேலூர் பகுதி வாழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அளித்துள்ள அனுமதியைஉடனடியாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 30–ந் தேதி திங்கட் கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் […]