செய்திகள்

டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி மதுரையில் 30-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சென்னை, டிச.27-– மதுரை மாவட்டம், மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் நாடகமாடி, மேலூர் பகுதி வாழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அளித்துள்ள அனுமதியைஉடனடியாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 30–ந் தேதி திங்கட் கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

Loading

செய்திகள்

மதுரை டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததாக வதந்தி பரப்புவது விஷமத்தனமானது

துரைமுருகன் குற்றச்சாட்டு சென்னை, டிச.1-– மதுரை டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததாக, மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் வதந்தி பரப்புவது விஷமத்தனமானது என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–- மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து 3.10.2023 நாளன்று, ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பினை தெளிவாக தெரிவித்தேன். மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள […]

Loading

செய்திகள்

மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்

மதுரை, நவ. 28– மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் புதன்கிழமை இரவு சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக, கோரிப்பாளையத்தில் தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை ரூ.190 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு அந்த பகுதியில் இரும்பு சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென இரும்பு சாரம் பாரம் தாங்கமால் சரிந்து […]

Loading

செய்திகள்

மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானம்

மதுரை, நவ. 26– மதுரையில் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்தது. மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது. வானிலை சீராகாத […]

Loading

செய்திகள்

மதுரையில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு: கே.என்.நேரு தகவல்

மதுரை, அக். 27– இனி வரும் காலங்களில் மதுரையில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். நேற்று மதுரையில் பெய்த மழையின் காரணமாக குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைச்சர்கள் கே.என் நேரு, மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கே.என் நேரு கூறியதாவது:– முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட […]

Loading

செய்திகள்

கீழடி அகழாய்வில் கிடைத்த அழகிய பானை

திருப்புவனம், செப். 12 கீழடி அகழாய்வில் அழகிய பானை கிடைத்துள்ளது. மதுரையை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு, பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய கண்ணாடி பாசி, மணிகள், கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், அகலமான செங்கல்கள், செம்பு பொருட்கள், சுடுமண் கழிவுநீர் குழாய்கள் என பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு […]

Loading