செய்திகள்

மகளை திருமணம் செய்ததால் ஆத்திரம்: காரில் மோதி மருமகனை கொன்ற மாமனார்

மதுரை, ஆக.17– மதுரை மாவட்டம் மேலூர் அருகே மகளை திருமணம் செய்த வாலிபரை காரில் மோதி மாமனார் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21), தும்பை பட்டி ராகவி (வயது 24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார். கணவரை இழந்த ராகவியை அவரை விட வயது […]

Loading

செய்திகள்

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்: நடிகர் விஜய் அழைப்பு

சென்னை, ஆக. 12– வைகை மண்ணில் நடக்கும் மாநாடு வாகை சூடும் வரலாறு என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார். மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு, 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி […]

Loading

செய்திகள்

மதுரை ஹோலிபேமிலி பள்ளியில் மாநகர போக்குவரத்து காவல் சார்பாக மாணவர்களுக்கு

மதுரை, ஆக.12– தமிழகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹோலிபேமிலி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளை பற்றிய விழிப்புணர்வினை திலகர்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி வழங்கினார். இதில் […]

Loading

செய்திகள்

மதுரையில் 21–ந்தேதி பிரமாண்ட த.வெ.க. மாநாடு

மதுரை, ஆக.8- மதுரையில் கோட்டை வடிவில் த.வெ.க. மாநாட்டு மேடை பிரமாண்ட மாக அமைக்கப்பட்டு வருகிறது. தொண்டர் களை விஜய் சந்திக்கும் வகையில் 200 மீட்டரில் நடைமேடையும் அமைக்கும் பணியும் நடக்கிறது. மதுரையில் கட்சியின் 2-வது மாநாட்டை 21-ந்தேதி நடத்த த.வெ.க. முடிவு செய்துள்ளது. தற்போது முழு வீச்சில் மாநாட்டு மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மாநாட்டு பந்தல் 250 அடி நீளத்தில் 70 அடி அகலத்தில் கோட்டை வடிவில் வடிவமைக்கப்பட உள்ளது. முதல் […]

Loading

செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை

மதுரை, ஜூலை 22– அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை இன்று விசாரணை நடத்தினர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய […]

Loading

செய்திகள்

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

மதுரை, ஜூலை 20– மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே மாதம் மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி […]

Loading

செய்திகள்

மதுரை – தூத்துக்குடி 4 வழி சாலையில் லாரியும் வேனும் மோதல்: 3 பேர் பலி

விருதுநகர், ஜூலை 10– அருப்புக்கோட்டை அருகே லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் மற்றும் கிளீனர் என 3 பேர் உயிரிழந்தனர். அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி 4 வழிச் சாலையில் இன்று காலையில் நிகழ்ந்த கோர விபத்தில், கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 3 பேர் பலி இந்த விபத்தில் 2 வாகனங்களின் ஓட்டுநர்களும், மற்றும் ஒரு கிளினர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே […]

Loading

செய்திகள்

மதுரை முருகன் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள்: ஓட்டுனர் உரிமம், காப்பீடு, ஆதார் வழங்க வேண்டும்

மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு மதுரை, ஜூன் 20– மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள், வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை காவல்துறையிடம் சமர்ப்பித்துவிட்டு மாநாட்டில் பங்கேற்கலாம் என்றும் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் நாளை மறுநாள் (ஜூன் 22) ஞாயிற்றுக்கிழமை முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு வரும் பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் வாகன பாஸ் வாங்கி வர வேண்டும் […]

Loading

செய்திகள்

கார் – வேன் மோதல்: 12 வயது சிறுமி உள்பட 2 பேர் பலி

மதுரை, ஜூன் 9– உச்சிப்புளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12வயது சிறுமி உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருத்தாச்சலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா வேனில் 15 பேர் இன்று அதிகாலை 5 மணிக்கு ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். உச்சிப்புளி அருகே மதுரை- – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், அதிகாலை 5 மணி அளவில் எதிரே வந்து கொண்டு […]

Loading

செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்

மதுரை, ஜூன் 8– மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் வர இருக்கும் சட்டமன்ற தேர்தல் வியூகம் கூட்டணி குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் நேற்று இரவு மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய […]

Loading