செய்திகள்

மதுரை மாநகரில் இன்றும் நாளையும் 144 தடை

மதுரை, பிப். 3– மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் தினந்தோறும் ஏராளமானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக மலைமீதுள்ள தர்காவில் ஆடு மற்றும் கோழியை உயிர்பலி கொடுக்கக் கூடாது என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் திருப்பரங்குன்றம் மலையை காக்க, நாளை அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் பதட்டம்

மதுரை, பிப். 3– மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் தினந்தோறும் ஏராளமானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக மலைமீதுள்ள தர்காவில் ஆடு மற்றும் கோழியை உயிர்பலி கொடுக்கக் கூடாது என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் திருப்பரங்குன்றம் மலையை காக்க, நாளை அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. […]

Loading

செய்திகள்

மதுரை அருகே தி.மு.க. பிரமுகர் தலை துண்டித்துக் கொலை: 2 பேர் கைது

திருமங்கலம், பிப். 2– மதுரை அருகே தி.மு.க. பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி பிள்ளைமார் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் முருகேசன் (வயது 52). இவர் அப்பகுதியில் தி.மு.க. பிரமுகர். இவரது நண்பர் மங்கம்மா பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (33). முருகேசனின் மகன் மணி (27) தனது இருசக்கர வாகன சான்றிதழை ராஜசேகரிடம் அடமானம் வைத்து ரூ.25 ஆயிரம் கடனாக பெற்றார். […]

Loading

செய்திகள்

டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பிரதமர் மோடியின் நடவடிக்கையே காரணம்

மதுரை, ஜன.31- “டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பிரதமர் மோடியின் நடவடிக்கையே காரணம்” என்று அ.வல்லாளப்பட்டியில் நடந்த பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி பேசினார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது. இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மேலூரை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்கள் கோரிக்கைகள் விடுத்து போராட்டங்கள் […]

Loading

செய்திகள்

மதுரை ‘டங்ஸ்டன்’ கனிமச்சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.24- மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை 50 கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கும்மியடித்தும் கொண்டாடினர். மின்விளக்கு இழைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ராக்கெட் உதிரி பாகங்களின் பயன்பாட்டுக்கான ‘டங்ஸ்டன்’ கனிமம் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி […]

Loading

செய்திகள்

நத்தம் அருகே காளை முட்டி இன்ஜினீயர் உயிரிழப்பு

நத்தம், ஜன. 17– மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி-வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி (34). சிங்கப்பூரில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் தனது மனைவி குருந்தாயிவுடன் நத்தம் அருகே சிரங்காட்டுபட்டியில் உள்ள மனைவியின் உறவினர் முருகன் என்பவரது வீட்டிற்கு வந்தார். அப்போது முருகனின் காளையை அவருடன் சேர்ந்து துண்டுகள் வாங்குவதற்காக அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக காளையின் மூக்கு கயிறு அவிழ்ந்து பழனியாண்டியை குத்தித் தள்ளியது. இதில் இரத்த வெள்ளத்தில் […]

Loading

செய்திகள்

மதுரை டங்க்ஸ்டன் போராட்டம்: பொதுமக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் கோரிக்கை பரிசீலிக்கப்படும்

சென்னை, ஜன.11-– மதுரையில் டங்ஸ்டன் போராட்டம் தொடர்பாக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பது தொடர்பாக கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.), வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், மத்திய […]

Loading

செய்திகள்

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம், ஜன. 5– மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டிருந்தார். நேற்றைய மாநாட்டு நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்த […]

Loading

செய்திகள்

மதுரையில் தடையை மீறி போராட்டம்: குஷ்பு உள்பட 314 பேர் மீது வழக்கு

மதுரை, ஜன. 4– மதுரையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக குஷ்பு உள்பட 314 பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கும் போராட்டத்தை தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நடத்த முடிவு செய்தனர். இதற்கு போலீசார் உரிய அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி பேரணி நடத்துவதாக கூறிய பா.ஜ.க. கட்சியினர் செல்லத்தம்மன் […]

Loading

செய்திகள்

மதுரையில் தடையை மீறி பேரணி: நடிகை குஷ்பு உள்பட பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் கைது

மதுரை, ஜன. 3– மதுரையில் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற, குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ள னர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நிய மித்து ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. அதேபோல் தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே […]

Loading