செய்திகள்

மணிப்பூர் கவர்னர் மாளிகை அருகே கிடந்த கையெறி குண்டுகள்

இம்பால், அக். 28– மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலுள்ள ஜி.பி. மகளிர் கல்லூரியின் வாசலில் இன்று காலை கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரி மணிப்பூர் கவர்னர் மாளிகையில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும், முதல்வரின் அரசு இல்லத்திலிருந்தும், மணிப்பூர் காவல்துறை தலைமையகத்திலிருந்தும் 300 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கையெறி குண்டுகள் குறித்து தகவல் கிடைத்தவுடன், அந்தப் பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்பால் […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய குகி ஆயுதக்குழுவினர்

இம்பால், அக். 19– மணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் மீது குகி ஆயுதக்குழுவினர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே வன்முறை, மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு […]

Loading

செய்திகள்

1,643 கி.மீ. தூரத்துக்கு இந்தியா – -மியான்மர் எல்லையில் ரூ.31 ஆயிரம் கோடியில் வேலி

புதுடெல்லி, செப்.19-– இந்தியாவும், மியான்மரும் 1,643 கி.மீ. எல்லையை பகிர்ந்து வருகின்றன. மொத்த எல்லையையும் சுமார் ரூ.31 ஆயிரம் கோடியில் வேலி அமைத்து பாதுகாக்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்கள் மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ளன. இந்த எல்லை வழியாக பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ஆயுதம், வெடி பொருட்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கு இந்த எல்லை அதிகமாக பயன் படுத்தப்படு […]

Loading

Manipur Protest
செய்திகள்

மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி இம்பாலா, செப். 10– மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்றனர். மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வெடித்த மோதல், 16 மாதங்களை கடந்தும் இன்னும் ஓயாமல் உள்ளது. இருதரப்பு மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதுடன், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு மணிப்பூரில் இயல்புநிலை திரும்பியதாக […]

Loading

செய்திகள்

அசாம் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் ராகுல்

திஸ்பூர், ஜூலை 8– அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். பின்னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அசாமில் வெளுத்து வாங்கிய கனமழையால் மாநிலத்தில் 28 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 24 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். மழைக்கு 58 பேர் பலியாகி உள்ளனர். 68,769 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் முழ்கி உள்ளன. 269 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக […]

Loading

செய்திகள்

ஹாத்ரஸ் சம்பவம்: போலே பாபாவின் ஆசிரமத்தில் போலீசார் சோதனை

மணிப்பூரி, ஜூலை 4– உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூரியில் அமைந்துள்ள போலே பாபாவின் ஆசிரமத்தில் போலீசார் இன்று சோதனை செய்துள்ளனர். போலே பாபாவை தேடி வரும் போலீசார், அவரது ஆசிரமத்தில் மறைந்திருக்கிறாரா அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து துப்பு கிடைக்குமா என்ற கோணத்தில் சோதனையை நடத்தி வருகிறார்கள். ஹாத்ரஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில், ‘போலே பாபா’ என்பவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 2–ந்தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். […]

Loading

செய்திகள்

மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி வேண்டுகோள்

எதிர்க்கட்சிகள் அமளி; -வெளிநடப்பு புதுடெல்லி, ஜூலை 4– வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால், ஒருநாள் மணிப்பூர் மக்கள் உங்களை நிராகரித்துவிடுவார்கள் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். 18-–வது நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. ஜனாதிபதி உரைக்கு […]

Loading

செய்திகள்

மணிப்பூர் மக்களுடைய கோபத்தின் அடையாளமாக நான்: மக்களவையை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்

டெல்லி, ஜூலை 3– மணிப்பூர் மக்களுடைய கோபத்தின் அடையாளமாகவே, ஒன்றிய அமைச்சரை தோற்கடித்து நான் நாடாளுமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்று கல்லூரி பேராசிரியர் நாடாளுமன்றத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஒன்றியத்தில் ஆட்சியமைத்த நிலையில், முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து கட்சி எம்.பிக்களும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில், எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக அரசை, பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.பி […]

Loading