செய்திகள்

கேரளாவில் வீட்டிற்குள் மின்கசிவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி

மூணாறு, மே 12– கேரளா இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே கொன்னத்தடி ஊராட்சி பணிக்கன்குடி கொம்பொடிஞ்சால் பகுதியில் வீட்டிற்குள் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல் கருகி பலியாயினர். அப்பகுதியைச் சேர்ந்த டாக்சி டிரைவர் அனீஷ். இவர் கொரோனா பாதிப்பால் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அவரது மனைவி சுபா 44, மகன்கள் அபிநந்த் 10, அபினவ் 4, சுபாவின் தாயார் பொன்னம்மா 70, அங்கு வசித்தனர். இந்நிலையில் சுபாவின் […]

Loading

செய்திகள்

கள்ளழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்வில் உயிரிழந்திருந்தால் நிவாரணம் வழங்கப்படும்

மதுரை, மே 12– கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான நிவாரண வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:– “அளவுக்கடங்காத, கட்டுக்கடங்காத கூட்டம். பால வேலைகள் […]

Loading

செய்திகள்

சேலம் இரட்டை கொலை வழக்கு : பீகாரைச் சேர்ந்த ஒருவர் கைது

சேலம், மே 12– சேலம் சூரமங்கலம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 65). இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வித்யா (வயது 60). இந்நிலையில் நேற்று மதியம் பாஸ்கரனும், வித்யாவும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதைக் கண்ட அப்பகுதி […]

Loading

செய்திகள்

சத்தீஸ்கரில் நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் 14 பேர் பலி

ராய்ப்பூர், மே 12– சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே நேரிட்ட கோர விபத்தில் 14 உயிர்கள் பறிபோனது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராய்ப்பூர்-பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே அமைந்திருக்கும் பனார்சி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சட்டவுட் கிராமத்திலிருந்து 50க்கும் மேற்பட்டோர் ஒரு மினி லாரியில் சென்றிருந்தனர். கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் நள்ளிரவு 12.15 மணியளவில் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 14 பேர் பலி அப்போது எதிர்பாராத விதமாக, […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்தியாவின் பதிலடி வலிமையாக இருக்க வேண்டும்

முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு புதுடெல்லி, மே.12- பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியாவின் பதிலடி மிகவும் வலிமைவாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று முப்படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நீடிக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா-?பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை […]

Loading

செய்திகள்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் தொழிற்சாலை

ராஜ்நாத் சிங் காணொலி மூலம் தொடங்கி வைத்தார் லக்னோ, மே.12- ஆண்டுக்கு 150 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் உள்ள புதிய ஏவுகணை தொழிற்சாலையை உத்தர பிரதேச மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் நேற்று […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 குறைவு

சென்னை, மே 12– தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1320 குறைந்த நிலையில், மீண்டும் ஒரு கிராம் தங்கம் ரூ.9,000-க்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் ரூ.71,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. கடந்த ஆண்டு உலக பொருளாதார சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் […]

Loading

செய்திகள்

விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி !

மிஸ் திருநங்கையாக தூத்துக்குடி சக்தி தேர்வு விழுப்புரம், மே.12- விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் மிஸ் திருநங்கையாக தூத்துக்குடியை சேர்ந்த சக்தி தேர்வு செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

அத்துமீறல்..! – ராஜா செல்லமுத்து

” நீ எப்படி அந்த கழிவறைக்குள்ளே போகலாம்? இது தப்பு “ என்று வாதாடினான் ராமராஜன். ” இல்லங்க அவசரமா இருந்தது. அதுதான் போயிட்டேன் “ வேலை செய்து கொண்டிருக்கும் மூர்த்தி சொல்ல அதற்கு கொஞ்சம் கூட சம்மதிக்காத ராமராஜன் மூர்த்தியை திட்டுவதிலேயே கவனமாக இருந்தான். ” யாராவது வந்திருந்தா என்ன ஆயிருக்கும் ? தப்பு தானே?” ” இல்ல . யாரும் வர மாட்டாங்கன்னு நான் போயிட்டேன். “ “அது எப்படி நீ இப்பிடி சொல்ற? […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

‘ஆபரேஷன் சிந்தூர்’: தீவிரவாதத்திற்கு இந்தியா தரும் நேரடி பதிலடி

நாடும் நடப்பும் ஆர் முத்துக்குமார் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காக மாறிய இந்தியா, இப்போது எந்த வெளிப்படையான முன்னறிவிப்பும் இல்லாமல், நேரடியாக துல்லியமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை தன் புதிய நோக்காக மாற்றியுள்ளது. புல்வாமா தாக்குதல் (2019) மற்றும் உரி தாக்குதல் (2016) ஆகியவற்றின் பின்னணியில், இந்தியா எச்சரிக்கையாக இருந்த போதிலும் இப்போது திடீர் […]

Loading