செய்திகள்

ஒன்றரை மாதமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா நாளையுடன் நிறைவு

கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு பிரயாக்ராஜ், பிப். 25– ஒன்றரை மாதமாக விமரிசையாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா, நாளையுடன் நிறைவடைகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக–கலாச்சார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்காக 10 ஆயிரம் ஏக்கர் […]

Loading

செய்திகள்

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இதுவரை 29 கோடி பேர் புனித நீராடல்

லக்னோ, ஜன. 31– மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா […]

Loading

செய்திகள்

கூட்ட நெரிசல் எதிரொலி: மகா கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் ரத்து

முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிரயாக்ராஜ், ஜன. 30– மகா கும்பமேளாவில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், பிரயாக்ராஜில் இன்று முதல் விவிஐபி எனப்படும் அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த […]

Loading

செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலம் மகா கும்பமேளா துவங்கியது

திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர் எண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கும்: மோடி வாழ்த்து பிராயாக்ராஜ், ஜன. 13– உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பிரயாக்ராஜ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரமாண்ட திருவிழா. இந்துக்கள் கொண்டாடும் பல்வேறு விழாக்களில் மகா கும்பமேளா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் […]

Loading

செய்திகள்

மகா கும்பமேளாவுக்கு இலவச பயணம்: தவறான செய்திக்கு இந்திய ரயில்வே விளக்கம்

சென்னை, டிச. 19– மகா கும்பமேளாவின் போது பயணிகள் ரயிலில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சில ஊடகங்கள் செய்திகளை பரப்பி வருவது இந்திய ரயில்வேயின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தச் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதுடன், அது மக்களை தவறாக வழிநடத்துபவை என்பதால் இந்திய ரயில்வே திட்டவட்டமாக இதனை மறுக்கிறது. இது தொடர்பாக இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்லுபடியாகக் கூடிய உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது இந்திய ரயில்வேயின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் […]

Loading