செய்திகள்

மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத தி.மு.க. அரசு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜன. 19: 25வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. யார் நலனிலும் அக்கறையில்லாத தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டிருக்கும் போராட்டம் இன்றும் 25ம் நாளாக நீடிக்கிறது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்து எந்தக் கவலையும் […]

Loading

செய்திகள்

சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 4-வது நாளாக போராட்டம்

சென்னை, ஜன. 11– பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் இன்று 4வது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, ஆசிரியர்கள் தங்கள் நெற்றியில் ‘181′ என எழுதியும், வில்லுபாட்டு பாடியபடியும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நூதன முறையில் போராட்டம் நடத்தினர். […]

Loading

செய்திகள்

16-வது நாளாக தொடரும் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை, ஜன. 9: 16-வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் சாலை அமர்ந்து போராட்டம் நடத்தியதால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறையில் போராட்டத்தை தொடங்கிய அவர்கள், பள்ளிகள் திறந்த பின்பும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என […]

Loading

செய்திகள்

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை: இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை, டிச. 26– சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. […]

Loading

செய்திகள்

‘‘மாநில உரிமை, உண்மையான கூட்டாட்சியை நிலைநாட்டும் போராட்டம் தொடரும்’’: ஸ்டாலின்

‘‘கவர்னர்களுக்கு காலக்கெடு; அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் வரை ஓயமாட்டோம்’’ சென்னை, நவ. 21– மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்! குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழகத்தில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு

சென்னை, நவ. 17: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடா்பான பணிகளை நாளை முதல் புறக்கணிக்கவுள்ளதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, வீடு வீடாக கணக்கீட்டு விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றைப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தமிழகத்தில் மட்டும் கிட்டத்திட்ட 6 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் […]

Loading

செய்திகள்

சென்னையில் மீண்டும் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை, அக். 10– சென்னையில் மீண்டும் போராட்டம் நடத்த முயன்ற மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவில் […]

Loading

செய்திகள்

நீதி விசாரணை நடத்த கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு

மதுரை, அக். 10– மதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மதுரை அண்ணாநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 31). இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரத்தில் 10-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம், ஆக. 20– ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 10–வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 61 பேர் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட் டது.கைதான மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி; சபாநாயகர் எச்சரிக்கை: இரு அவைகளும் ஒத்திவைப்பு

தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி போராட்டம் புதுடெல்லி, ஆக. 18– பீகார்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து […]

Loading