செய்திகள்

மதுரையில் தடையை மீறி போராட்டம்: குஷ்பு உள்பட 314 பேர் மீது வழக்கு

மதுரை, ஜன. 4– மதுரையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக குஷ்பு உள்பட 314 பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கும் போராட்டத்தை தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நடத்த முடிவு செய்தனர். இதற்கு போலீசார் உரிய அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி பேரணி நடத்துவதாக கூறிய பா.ஜ.க. கட்சியினர் செல்லத்தம்மன் […]

Loading

செய்திகள்

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தடையை மீறி போராட்டம்

சென்னை, ஜன. 2– அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அண்ணா தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 900 அண்ணா தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் சென்னை, டிச.27– அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்திய அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விருகை என்.ரவி உட்பட 900 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். […]

Loading

செய்திகள்

வங்கதேசத்தில் 3 இந்து கோவில்கள் மீது தாக்குதல், சிலைகள் சேதம்: ஒருவர் கைது

டாக்கா, டிச. 21– வங்கதேசத்தில் 3 இந்து கோவில்களில் சிலைகளை சேதப்படுத்திய 27 வயதான வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவிற்கு வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. ஷேக் ஹசீனா தப்பி ஓடியதை அடுத்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் […]

Loading

செய்திகள்

அமித் ஷா பதவி விலகக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.கள் போராட்டம்

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுலை தடுத்து நிறுத்திய பாஜக எம்.பி.க்கள் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்.பி. மண்டை உடைந்தது புதுடெல்லி, டிச. 19– அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சை ஆக்குவதாக கூறி பாஜகவும் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுலை […]

Loading

செய்திகள்

பார்லிமென்ட் வளாகத்தில் ‘இண்டியா’ கூட்டணி போராட்டம்: சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் புறக்கணிப்பு

புதுடில்லி, டிச. 5– பார்லிமென்ட் வளாகத்தில் இண்டியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் நடத்திய போராட்டத்தை சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்தனர். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. லோக்சபாவில் இன்றைய அலுவல்கள் துவங்கி நடந்து வருகிறது. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, ராஜ்யசபா மதியம் 12 மணி […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகளின் போராட்டம்: தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம் வாபஸ்

சியோல், டிச. 4– தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும், அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார். 50 ஆண்டுகளில் தென்கொரியாவில் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 190 […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கியவர்களை முழுமையாக மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம்: ஐ.ஐ.டி. வல்லுநர்கள் எச்சரிக்கை திருவண்ணாமலை, டிச. 3– திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கியவர்களை முழுமையாக மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.ஐ.டி. வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் நேற்று முன்தினம் மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மண் […]

Loading

செய்திகள்

சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முழு கடையடைப்பு போராட்டம்

மதுரை, நவ. 29– மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி தமிழகத்தின் முதல் பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்டது. அழகர் மலைக்கும், பெருமாள் மலைக்கும் அரிட்டாபட்டி பல்வேறு சிறப்புகளை கொண்டது. அரிட்டாபட்டி மற்றும் அருகில் உள்ள மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப் பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் […]

Loading

செய்திகள்

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வு காலப் பயன்களை வழங்க ஓ.பி.எஸ்.வலியுறுத்தல்

சென்னை, அக். 25 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு காலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பொதுவாக, அரசுப் பணியிலிருந்தோ, பொதுத் துறை நிறுவனங்களிலிருந்தோ அல்லது தனியார் நிறுவனங்களிலிருந்தோ ஓய்வு பெறும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, ஓய்வு பெறும் தினம் அன்றே, அவர்களுக்கு உண்டான வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, […]

Loading