செய்திகள்

செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்

திருக்குவளை, மே 4– இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலைக் கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை, வெள்ளபள்ளம், ஆற்காட்டுதுறை, செருதூர் ஆகிய நான்கு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஐந்து படகுகளில் சென்ற 24 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி பொருட்களை பறித்து சென்றனர். குறிப்பாக செருதூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு படங்களில் சென்ற 10 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் நடத்திய தாக்குதல் […]

Loading

செய்திகள்

அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டம்

நியூயார்க், ஏப்.20– அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வலுத்து வருகிறது. அதிபர் டிரம்ப் இறக்குமதி ஏற்றுமதி வரி ஏற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், வரி உயர்வு, பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காசா, உக்ரைன்போரில் அமெரிக்க நிலை, அரசு ஊழியர்கள் பணி நீக்கம் என கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை அரசு ஊழியர்கள் சுமார் 2 லட்சம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது போன்ற முடிவுகளுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க […]

Loading

செய்திகள்

‘கே.எப்.சி.’ சிக்கன் கடைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம் ஒருவர் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத், ஏப். 19– பாகிஸ்தானில் கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச பிராண்டுகள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தது தான் என்று தகவல் பரவியது. இதனால் சர்வதேச பிராண்டுகளான கேஎப்சி, பிட்சா ஹட், பூமா, டொமினோஸ் உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்

நாளை தீக்குளிப்பு போராட்டம் அறிவிப்பு ராமேஸ்வரம், மார்ச் 3– ராமேஸ்வரம் மீனவர்கள் திருவோடு எந்தி போராட்டம் நடத்தினர். நாளை தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படுமு் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மீனவர்களின் விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்வதால், மீனவர்களின் வாழ்வாதாரதமும் பாதிப்படைந்து வருகிறது. மீனவர்களை விடுவிக்கக் கோரி இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அழுத்தம் தர […]

Loading

செய்திகள்

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்

ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் காஞ்சிபுரம், பிப். 5– சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிய வருகின்றனர். இங்கு பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், ஊதிய உயர்வு, 8 மணி […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் இன்று இயல்பு நிலை திரும்பியது: பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி

போராட்டத்தில் ஈடுபட்ட 195 பேர் மீது வழக்கு மதுரை, பிப். 5– திருப்பரங்குன்றத்தில் இன்று இயல்பு நிலை திரும்பியது. பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் என்று இந்து அமைப்பினர் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி கடந்த 2 தினங்களாக மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். இதன்படி திருப்பரங்குன்றம் […]

Loading

செய்திகள்

போராட்டம் நடத்தினாலே கைது செய்வதா? : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை, ஜன.31- போராட்டம் நடத்தினாலே கைது செய்வதா என்றும், தி.மு.க. அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 44 மாத கால தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், தமிழக மக்கள் தங்களின் தேவைக்காகவும், நலனுக்காகவும் வீதியில் இறங்கி போராடக்கூடிய அவலம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதை இந்த […]

Loading

செய்திகள்

மதுரையில் தடையை மீறி போராட்டம்: குஷ்பு உள்பட 314 பேர் மீது வழக்கு

மதுரை, ஜன. 4– மதுரையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக குஷ்பு உள்பட 314 பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கும் போராட்டத்தை தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நடத்த முடிவு செய்தனர். இதற்கு போலீசார் உரிய அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி பேரணி நடத்துவதாக கூறிய பா.ஜ.க. கட்சியினர் செல்லத்தம்மன் […]

Loading

செய்திகள்

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தடையை மீறி போராட்டம்

சென்னை, ஜன. 2– அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அண்ணா தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 900 அண்ணா தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் சென்னை, டிச.27– அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்திய அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விருகை என்.ரவி உட்பட 900 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். […]

Loading