சென்னை, ஜன.28- பண்டிகை காலங்களில் சென்னை-திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கருங்குழி-பூஞ்சேரி இடையே 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, தினசரி கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை சமயங்களில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மதுராந்தகம் அருகில் உள்ள கருங்குழியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் (ஈ.சி.ஆர்.) உள்ள பூஞ்சேரி வரை […]