சென்னை, மே 16– 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியலில் – 10838 பேரும், சமூக அறிவியலில் – 10256 பேரும் 100க்கு 100 எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் முன்னதாக வெளியான பிளஸ்-2 பொதுத் […]