செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் பலி

தகவலை வெளியிட்ட பாகிஸ்தான் இஸ்லாமாபாத், மே 8– பாகிஸ்தான் மீதான இந்தியாவின் சிந்தூர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து […]

Loading

செய்திகள்

எஸ்.ஆர்.எஸ். சர்வோதயா பெண்கள் விடுதி விழா:

மாணவிகளுக்கு போலீஸ் துணை கமிஷனர் விஷ்வேஷ் பி சாஸ்திரி எழுச்சி உரை சென்னை, ஏப் 22– பேராசிரியர் டாக்டர் சங்கர் குமார் சன்யால் தலைமையில் இப்போது வெற்றிகரமாக இயங்கும் எஸ்ஆர்எஸ் சர்வோதயா பெண்கள் விடுதி அதன் விடுதி நாளைக் கொண்டாடியது. (1932ம் ஆண்டு மகாத்மா துவக்கி விடுதி இது) வட சென்னை போக்குவரத்து துணை ஆணையர் விஸ்வேஷ் பி சாஸ்திரியின் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். விடாமுயற்சியுடன் முயற்சி செய்வதன் மூலம் எந்த ஒன்றையும் அடைவதற்கு தங்களை அர்ப்பணித்துக் […]

Loading

செய்திகள்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்

ஜெருசலேம், ஏப். 14– காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், அல் – அஹ்லி மருத்துவமனை சேதம் அடைந்ததில் நோயாளி ஒருவர் பலியானார். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இஸ்ரேல் – காசா இடையேயான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1 ந்தேதி முடிவுக்கு வந்த நிலையில், […]

Loading

செய்திகள்

புதுச்சேரியிலிருந்து நூதன முறையில் மதுபானங்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது

திண்டிவனம், ஏப். 14– புதுச்சேரியிலிருந்து நூதன முறையில் மதுபானங்களை கடத்தி வந்து 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி பஸ் நிலையம் அருகே திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வதுரை மற்றும் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்த 2 பெண்களை போலீசார் அழைத்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் […]

Loading

செய்திகள்

6 பெண்கள் விண்வெளியில் திகில் பயணம்

அமெரிக்கா: பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் உள்ளிட்ட ஆறு பெண்கள் கொண்ட குழு, ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணத்திற்கு தயாராக உள்ளது. ப்ளூ ஆரிஜின் நிறுவனம், அதன் நியூ ஷெப்பர்ட்-31 ராக்கெட் மூலம் இந்த பயணத்தை மேற்கொள்கிறது. இந்த பயணத்துக்கான முக்கிய நோக்கம் – விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதாகும். நியூ ஷெப்பர்ட் ராக்கெட், டெக்சாஸில் உள்ள ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். இதில் உள்ள விண்கலம், முற்றிலுமாக தானியங்கி முறையில் […]

Loading

செய்திகள்

ஏப்ரல் 7- உலக சுகாதார தினம்; எனது உடல்நலம், எனது உரிமை

சிறப்புக் கட்டுரை தாய்-சேய் ஆரோக்கியம், குடும்பங்களின் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளமாக உள்ளது. இன்று ஏப்ரல் 7ல் கொண்டாடப்படும் உலக சுகாதார தினம், ஆரோக்கியமான தொடக்கங்கள், நம்பிக்கையான எதிர்காலங்கள் என்ற தலைப்பில், ஒரு வருட கால விழிப்புணர்வு முயற்சியை தொடங்க உள்ளது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், தாய்மார்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம், ஆரோகியமான வாழ்க்கையை உறுதிப்படுத்திவிடலாம். மகப்பேறு மற்றும் பிறப்புக்கு பிந்தைய ஆரோக்கியம்: உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அதன் […]

Loading

செய்திகள்

ஐக்கிய அமீரகத்தில் பெண்கள் திருமண சட்டத்தில் திடீர் மாற்றம்

ஏப்ரல் 15 ந்தேதி முதல் நடைமுறை துபாய், பிப். 21– ஐக்கிய அமீரகத்தில், பெண்களுக்கான திருமண நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் ஏப்ரல் 15 ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கருதப்படுகிறது. இதில் மொத்தம் 7 எமிரேட்ஸ் இடம் பெற்றுள்ளன. அவை, அபுதாபி, அஜ்மன், துபாய், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா, உம் அல் குவைன் ஆகியவை ஆகும். அரபு நாடுகளில் பொதுவாக சட்டங்கள் மிகக் கடுமையாக […]

Loading

செய்திகள்

டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: ரேகா குப்தா அறிவிப்பு

புது டெல்லி, பிப். 20- ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக காஷ்மீரி கேட்டில் உள்ள ஸ்ரீ மார்கட் வாலே ஹனுமான் பாபா கோவிலுக்கு ரேகா குப்தா சென்று வழிபட்டார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:- டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை எனது அரசாங்கம் நிறைவேற்றும். மாதாந்திர உதவியின் முதல் தவணை மார்ச் 8ம் தேதிக்குள் தகுதியான பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எங்களது முதன்மையான […]

Loading

செய்திகள்

தொட்டால் ‘ஷாக்’ அடிக்கும்; பெண்கள் பாதுகாப்புக்கு கை கடிகாரம்

எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிமுகம் சென்னை, பிப்.15-– பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் கை கடிகாரத்தை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், வடிவமைத்துள்ளனர். இதற்கான வெளியீட்டு விழா ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் தலைமை தாங்கினார். வேந்தர் ஏ.சி.சண்முகம், இந்த கை கடிகாரத்தை அறிமுகம் செய்துவைத்தார். இந்த கை கடிகாரத்தை அணிந்திருப்பவர்கள் தவிர்த்து, மற்றவர்கள் யார் தொட்டாலும் ‘ஷாக்’ அடிக்கும். […]

Loading

செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவம்: முக்கிய குற்றவாளி கைது

சென்னை, பிப். 1– கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 8 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தினர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். […]

Loading