செய்திகள்

விழுப்புரத்தில் பெஞ்ஜல் புயல் பாதிப்பு: சரிசெய்ய ரூ.1,863½ கோடி நிதி தேவை

விழுப்புரம், டிச.21 விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.1,863½ கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக 29.11.2024 முதல் 3.12.2024 வரை பெய்த கனமழை (48 மணி நேரத்தில் 56 செ.மீ) மற்றும் அதனைத்தொடர்ந்த அதி கனமழையின் காரணமாக மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான சேதங்களை தொடர்ந்து உடனடி மீட்பு […]

Loading

செய்திகள்

பெஞ்ஜல் புயல், மழை சேதம்: ரூ.614 கோடி நிவாரண நிதி தேவை

வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவிடம் ரங்கசாமி அறிவுறுத்தல் பாண்டிச்சேரி, டிச 9 சமீபத்தில் வீசிய பெஞ்ஜல் புயல், மழை – வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் புதுச்சேரிக்கு 614 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவிடம் முதல்வர் என். ரங்கசாமி அறிவுறுத்தினார். புயல் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, பொது மக்களின் பாதிப்புகளையும் குறைகளையும் கேட்டறிந்த குழுவினர் முதல்வரை […]

Loading

செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் ரூ.2,000 நிவாரணத் தொகை

டோக்கன் விநியோகம் துவங்கியது ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் பட்டுவாடா விழுப்புரம், டிச. 5– விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பெஞ்ஜல் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படும் என்று அமுதா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா தெரிவித்தார். பெஞ்ஜல் புயல், கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்கள் பெரிதும் […]

Loading

செய்திகள்

50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ. தூரத்தை 3 கி.மீ. வேகத்தில் 5 நாட்களாக கடந்த பெஞ்ஜல் புயல்

சென்னை, டிச. 3– தமிழக புயல் வரலாற்றில் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ. தூரத்தை சுமார் 3 கி.மீ. வேகத்தில் பெஞ்ஜல் புயல் மிக மெதுவாக 5 நாட்களாக கடந்துள்ளது. வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் மகாபலிபுரம் – புதுச்சேரி அருகே கரையை கடந்தது. தொடர்ந்து மேற்கு–தென் மேற்கில் பயணித்த புயல் புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் நிலைகொண்டது. புயல் கரையை கடக்கும் போது செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் […]

Loading

செய்திகள்

சென்னை ஏரிகள் வேகமாக நிரம்புகிறது : செம்பரம்பாக்கத்துக்கு 3,745 கன அடி நீர்வரத்து

சென்னை, நவ. 30– பெஞ்ஜல் புயல் மழையால் சென்னை ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் அணைக்கு நீர்வரத்து 3,745 கன அடியாக உயர்ந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி […]

Loading

செய்திகள்

சென்னையில் பலத்த காற்றுடன் இடைவிடாது மழை: 12 செ.மீ. பதிவு

சென்னை, நவ. 30– சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் பெய்ய தொடங்கிய மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்ட்ரல், கிண்டி, அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது. அரசு பஸ்கள் தவிர மற்ற வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர […]

Loading