சென்னை, பிப் 8– அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை தாமதப்படுத்தும் தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் அங்கு பணியுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தான். இந்தத் தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் காலாவதி ஆகி ஓராண்டு […]