செய்திகள்

டெல்லியில் அமைச்சர் முருகன் இல்லத்தில் பொங்கல் விழா: மோடி பங்கேற்பு

புதுடெல்லி, ஜன.14– டெல்லியல் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு நடத்தினார். பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது என நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழகத்தில் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் […]

Loading

செய்திகள்

எல்.முருகன் இல்லத்தில் நாளை பொங்கல் விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதுடெல்லி, ஜன. 13– டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை (14–ந்தேதி) நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் நாளை (14–ந்தேதி) தனது இல்லத்தில் எல்.முருகன் பொங்கல் கொண்டாட உள்ளார். இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் […]

Loading

செய்திகள்

இந்தியாவின் வலிமையைக் காட்டும் சோம்நாத் கோவில் கொடி: மோடி பெருமிதம்

ஆமதாபாத், ஜன. 11: சோம்நாத் கோவிலில் பறக்கும் கொடி இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவில் மீது 1026–ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஜனி முகமது தாக்குதல் நடத்தி, ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்து சென்றார். அதன் பின், முகலாய ஆட்சியாளர்களால் பலமுறை கோவில் தாக்கப்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு பின், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சோம்நாத் கோவில் கம்பீரமாக நிற்கிறது. இதை நினைவுகூரும் வகையில் சோம்நாத் […]

Loading

செய்திகள்

பாரதி கனவை நனவாக்குபவர் பிரதமர் மோடி: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜன. 3: பாரதியின் கனவை நனவாக்கு பவராக மோடி செயல்படுகிறார் என்றும், 2047-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் உலகளவில் முதல் இடத்தை இந்தியா எட்டும் என்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே தலைமை தாங்கினார். புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். விழாவில், துணை […]

Loading

செய்திகள்

உத்தரபிரதேசம் லக்னோவில் ரூ.230 கோடி செலவில் தேசிய நினைவுச் சின்ன அருங்காட்சியகம்:

பிரதமர் மோடி திறந்து வைத்தார் லக்னோ, டிச.26- உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவுச்சின்ன அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 65 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடி செலவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவிடமும், […]

Loading

செய்திகள்

டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை

புதுடெல்லி, டிச. 25– டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அங்கு மாட்டு கொட்டகையில், கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில் குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து

மஸ்கட், டிச.19: பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஓமனுக்கு ஏற்றுமதி ஆகும் 99 சதவீத இந்திய பொருட்களுக்கு ஓமன் வரி விதிக்காது. ஜோர்டான், எத்தியோப்பியா ஆகிய நாடுகளை தொடர்ந்து ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-–ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலும், ஓமன் சார்பில் அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா–ஓமன் நாட்டு உறவுகளை பிரதிபலிக்கும் வரவேற்பு மோடி பெருமிதம்

மஸ்கட், டிச. 18: எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஓமன் சென்றார். ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக்-ஐ சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். முதலில் ஜோர்டானுக்கும், அதன் பின்னர் எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ஓமனில் கிடைத்த இந்த […]

Loading

செய்திகள் முழு தகவல்

அமெரிக்க வரிவிதிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுங்கள் பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, டிச.18: இந்தியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பினால், தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்திய -அமெரிக்க இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டின் ஏற்றுமதித் துறைகளில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் குறித்து அவசரமாகவும், கவலையோடும் இதனை எழுதுவதாகக் […]

Loading

செய்திகள் முழு தகவல்

சோனியா காந்தி மன்னிப்பு கேட்க ஜெ.பி. நட்டா வலியுறுத்தல்

புதுடெல்லி, டிச. 15: பார்லிமெண்டில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியது குறித்து ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்தினர். பார்லிமெண்டில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் […]

Loading