செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை

கோவை, மே 13– தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாதகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் அளித்தனர். […]

Loading

செய்திகள்

பாலியல் வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது

25–ந் தேதி வரை நீதிமன்ற காவல் கோவை, ஏப். 13– கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். அவருக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ். இவர், கடந்த 2004-ம் ஆண்டு மே 21-ந் தேதி கோவை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தன் […]

Loading

செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை, பிப். 24– அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. ஞானசேகரனிடம் சிறப்பு குழு […]

Loading

செய்திகள்

மாணவி வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடங்கியது

சென்னை, டிச. 30- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலன் விசாரணை குழு விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணா […]

Loading

செய்திகள்

மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சி மீது கவர்னரிடம் விரைவில் புகார் சென்னை, டிச.28- மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் உலகம் எங்கிலும் அறியும் பல்கலைக்கழகமாக விளங்கி வருகிறது. கடந்த 23-ந்தேதி, இரவு 7.45 மணிக்கு ஞானசேகரன் […]

Loading