செய்திகள்

பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்கிறார்

சென்னை, பிப்.4– ரெயில்வே திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மத்திய அரசின் 2025–-26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்கள் மற்றும் கோவா ஆகிய ரெயில்வே துறைக்கு மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் திட்டங்கள் குறித்தும் அஸ்வினி வைஷ்ணவ் புதுடெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 2025-–26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரெயில்வே மேம்பாட்டுத் […]

Loading

செய்திகள்

பாம்பன் புதிய பாலம் தரமாக இல்லை: பாதுகாப்பு ஆணையர் அறிக்கை

ராமேஸ்வரம், நவ. 28– ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில், பெரும் குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட புதிய பாலம் தரம் குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914ல் கட்டப்பட்ட தூக்குப்பாலம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக ராமேசுவரம் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணி 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய ரயில் பாலம் 2,078 […]

Loading

செய்திகள்

அக்டோபரில் பாம்பன் கடலில் ரெயில் போக்குவரத்து துவக்கம்

விறுவிறுப்பாக நடைபெறும் தூக்குப் பாலப் பணிகள் ராமேஸ்வரம், ஆக. 17– பாம்பன் பாலத்தில் அக்டோபர் மாதத்தில் ரெயில் போக்குவரத்து துவங்க உள்ள நிலையில், தூக்குப் பாலம் அமைக்கும் பணிகளை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பார்த்து செல்கின்றனர். பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் 2.1 கிலோ மீட்டரில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், 1.6 கிலோ மீட்டர் தூரத்திற்கான பாலம் பணி முடிந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ரெயில் சோதனை […]

Loading

செய்திகள்

ரூ.545 கோடியில் அமைக்கப்பட்ட பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி

ராமேசுவரம், ஆக.5- பாம்பன் கடலில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ரெயில் தூக்குப்பாலம் வழியாக ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. பாம்பன் கடலில் ரூ.545 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ரெயில் பாலத்துக்காக பாம்பன் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டன. அதன் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. அதே போல பாலத்தின் மையப்பகுதியில் 77 […]

Loading

செய்திகள்

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 25 பாம்பன் மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ராமேஸ்வரம், ஜூலை 2– இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 25 பாம்பன் மீனவர்களை விடுவிக்கக்கோரி, மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் நம்புதாளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 நாட்டு படகுகளையும் அவற்றிலிருந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை நேற்று அதிகாலையில் கைது செய்தது. கைதான மீனவர்கள் இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காலவரையற்ற போராட்டம் இதையடுத்து நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட […]

Loading