செய்திகள்

பாமக தலைவராக கட்சியை வழிநடத்துவேன்: ராமதாசுக்கு எதிராக அன்புமணி போர்க்கொடி

சென்னை, ஏப். 13– பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தொடர்ந்து கட்சியை வழி நடத்திச் செல்வேன் என்று, அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் […]

Loading

செய்திகள்

நானே பா.ம.க. தலைவர்: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

செயல் தலைவராக அன்புமணி நியமனம் விழுப்புரம், ஏப். 10– பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்படப் போவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பேசியதாவது:– பா.ம.க. நிறுவனரான நான் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசையும் எனக்கு இல்லை. 2026-ம் ஆண்டு […]

Loading

செய்திகள்

ராணிப்பேட்டை பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர் கொலை: அன்புமணி கண்டனம்

சென்னை, ஜன. 23– ராணிப்பேட்டையை சேர்ந்த பாமக தொண்டர் பெட்ரோல் குண்டுவீசி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு தமிழ்நாடு அரசும் காவல்துறையும் முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:– இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில், கொடியவர்களால் பெட்ரோல் குண்டு வீசி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டன் தம்பி […]

Loading

செய்திகள்

‘‘முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமன போட்டித்தேர்வை உடனடியாக நடத்துங்கள் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, நவ. 2 தமிழ்நாட்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு அனைத்து காலியிடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமும் […]

Loading

செய்திகள்

‘‘மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டம் வேண்டும்’’

டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் சென்னை, செப்.20– ‘‘தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ள சிக்கல்களில் முதன்மையானது மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாதது ஆகும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு இதுவரை தெளிவான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். உடனடியாக மூட நடவடிக்கை தமிழ்நாட்டில் போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் போதிய கட்டமைப்புகள் இல்லாமல் […]

Loading