செய்திகள்

எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்

புதுடெல்லி, மார்ச் 25- அதிமுக பொதுச்செயலாளர் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி  பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட சென்றுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்திருந்தது. தமிழக சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் […]

Loading

செய்திகள்

மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: தவெக, பாஜக உட்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு

சென்னை, பிப். 26-  தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து அடுத்த மாதம் மார்ச் 5-ந் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இந்த நிலையில், மார்ச் 5-ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Loading

செய்திகள்

உத்தரகாண்டில் இன்றுமுதல் பொது சிவில் சட்டம் அமல்

டேராடூன், ஜன. 27– உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வர உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 7 ந்தேதி நாட்டிலேயே முதல் மாநிலமாக, உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மாநில ஆளுநரும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்டமாக மாறியது. தற்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிவுற்ற […]

Loading

செய்திகள்

பாஜக தனது இரட்டை நிலையை நிறுத்தி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உதவ வேண்டும்

பாஜக தலைவருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் சென்னை, ஜன. 23– பாஜக தனது இரட்டை நிலையை நிறுத்திக்கொண்டு, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– அண்ணாமலைக்கு எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல், அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது. அண்டை நாடான இலங்கையோடு நல்லிணக்கமும், நட்புறவும் இருக்க வேண்டுமென்ற […]

Loading

செய்திகள்

பாஜக ஆதரவு வாபஸ்– நிதிஷ்குமார்

பாட்னா, ஜன. 23– மணிப்பூரில் ஆளும் பாஜக தலைமையிலான அரசிற்கு அளித்து வந்த ஆதரவை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வாபஸ் பெற்றுள்ளது, தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பைரென் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களிலும் தனித்து போட்டியிட்ட பாஜக 32 இல் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து தேசிய மக்கள் […]

Loading

செய்திகள்

1978 இல் சரத்பவார் தொடங்கிய துரோகத்திற்கு பாஜக முற்றுப்புள்ளி: அமித் ஷா ஆவேசம்

மும்பை, ஜன. 13– முன்னாள் ஒன்றிய அமைச்சர் சரத் பவார் 1978 ஆம் ஆண்டு தொடங்கிய துரோகத்தை 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க முடித்து வைத்ததாக ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கலகலத்துப்போய் இருக்கிறது. இந்நிலையில், பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் […]

Loading

செய்திகள்

அமித் ஷா பதவி விலகக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.கள் போராட்டம்

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுலை தடுத்து நிறுத்திய பாஜக எம்.பி.க்கள் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்.பி. மண்டை உடைந்தது புதுடெல்லி, டிச. 19– அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சை ஆக்குவதாக கூறி பாஜகவும் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுலை […]

Loading

செய்திகள்

காங்கிரசின் 55 ஆண்டு ஆட்சியில் அரசியலமைப்பில் 77 திருத்தங்கள்; பாஜகவின் 16 ஆண்டில் 22 திருத்தங்கள்

நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேச்சு டெல்லி, டிச. 18– காங்கிரசின் 55 ஆண்டு ஆட்சியில் அரசியலமைப்பில் 77 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் பாரதீய ஜனதாவின் 16 ஆண்டு ஆட்சியில் 22 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விவாதம் நடந்த போது மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, “அரசியலமைப்பு ஒருபோதும் மாறாதது என்றெல்லாம் கருதப்படவில்லை. அரசியலமைப்பை திருத்துவதற்கான விதி 368-ல் உள்ளது. அரசியலமைப்பு மாற்றம் காங்கிரஸ் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி, டிச. 5– கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக, தேமுதிக, பாஜக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த […]

Loading

செய்திகள்

குஜராத்தில் பாஜக மகளிரணி தலைவி தூக்கிட்டு தற்கொலை

சூரத், டிச. 03– குஜராத்தில் பாஜக மகளிர் அணி தலைவி தீபிகா படேல், சூரத்தின் பிம்ராட் பகுதியிலுள்ள வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். குஜராத் மாநிலம், சூரத்தில் பாஜக மகளிர் அணி தலைவி தீபிகா படேல் (வயது 30) சூரத்தின் பிம்ராட் பகுதியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா பிணமாக மீ்ட்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை கூறுகையில், […]

Loading