சென்னை, மே 16 – பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடையாக வழங்குவதாக எஸ்.ஆர்.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பஹல்காம் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தையும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு மற்றும் ஆயுதப் படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் எனும் வெற்றிகரமான […]