செய்திகள்

பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்தில் 14 பேர் பலி

கராச்சி, ஜன. 19: பாகிஸ்தான் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் கடைகள் தரை தளத்தில் உள்ளன. இந்நிலையில் நேற்று தினம் இரவு திடீரென இந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் தரை தளத்தில் உள்ள கடைகளில் […]

Loading

செய்திகள்

இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் 3 ஏகே–47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுப்பு

அமிர்தசரஸ், ஜன. 18– இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் பஞ்சாப் பதான்கோட் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது எல்லைப் பகுதியான நரோட் ஜெய்மால் சிங் அருகே 3 ஏகே–47 துப்பாக்கிகள், 2 கைத் துப்பாக்கிகள், 98 தோட்டாக்கள், வெடிமருந்து உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சோதனையின்போது மாநிலத்தில் சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் கொண்டு […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் 11 தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர்

இஸ்லாமாபாத், ஜன. 10: பாகிஸ்தானில், 11 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் கடந்த 8–ந்தேதி பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் எனும் அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை

இஸ்லாமாபாத், டிச. 20– ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆஸ்திரேலியாவில் 16 பேரை சுட்டுக்கொன்ற தந்தை, மகன்: இருவருமே பாகிஸ்தானியர்கள்

சிட்னி, டிச. 15: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் 50 வயதான நவீத் அக்ரம் மற்றும் அவரது 24 வயதான மகன் சஜித் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேருமே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தந்தை, மகன் என்று தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான ஒரு துப்பாக்கிச் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆப்கானிஸ்தான் மீது பயங்கரவாதத்தை ஏவி விடும் பாகிஸ்தான்: ஐ.நா.சபையில் இந்தியா கண்டனம்

நியூயார்க், டிச. 11– ஆப்கானிஸ்தான் மீது பயங்கரவாதத்தை ஏவி விடும் பாகிஸ்தானுக்கு, ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் கிரிக்கெட் வீரர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்தனர். இருதரப்பு மோதலை முடிவுக்கு கொண்டு வர கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. ஆனால், அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]

Loading

செய்திகள்

உரி நீர் மின் திட்டத்தை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் சதியை முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு விருது

ஸ்ரீநகர், நவ. 26: ஆபரேஷன் சிந்தூரின் போது உரி நீர்மின் திட்டத்தை தகர்க்க முயற்சித்த பாகிஸ்தானின் சதித்திட்டத்தை முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள முக்கியமான பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் ராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சி கேட்டுக் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு

இஸ்லாமாபாத்,அக்.4– பாகிஸ்தான் கராச்சியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:– பாகிஸ்தான் கராச்சியில் இன்று அதிகாலை 1.59 மணியளவில் (இந்திய நேரப்படி) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல இடங்களில் நன்கு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

Loading

செய்திகள்

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது: ஐ.நா. சபையில் ஜெய்சங்கர் பேச்சு

நியூயார்க், செப்.29- ”உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக எங்கள் அண்டை நாடு உள்ளது. பல தசாப்தங்களாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டிலிருந்துதான் வருகின்றன” என ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை கடுமையாக சாடி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். நியூயார்க்கில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் நீண்டகால எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் 80-வது பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் […]

Loading

செய்திகள்

போதைப் பொருள் கடத்தலில் இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு: டிரம்ப்

வாஷிங்டன், செப். 18– போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, தி டொமினிசியன் ரிபப்ளிக், ஈகுவேடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைதி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாராகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசுலா […]

Loading