செய்திகள்

கோல்கட்டா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து:

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி கோல்கட்டா, ஏப்.30 கோல்கட்டாவில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ஊழியர் ஒருவர் தப்பிக்க எண்ணி, மேலிருந்து குதித்து இறந்தார். தீ விபத்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் அணைக்கும் பணியில் […]

Loading

செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

சிவகாசி, ஏப். 29– சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு பெண்கள் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வந்தனர். 26-ந்தேதி பெண் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகள் தரை மட்டமாயின. இந்த வெடி விபத்தில் சொக்கம்பட்டி மாரியம்மாள் (வயது […]

Loading

செய்திகள்

ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து :

பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது டெஹ்ரான், ஏப். 27– ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே உள்ளது ராஜேய் துறைமுகம். பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள இந்த துறைமுகம் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும், 8 கோடி டன் அளவுக்கு பொருட்கள் […]

Loading

செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் கனமழை: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சிறீநகர், ஏப்.21– ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் ஆற்றின் அருகில் இருக்கும் தரம்குண்ட் கிராமத்தில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் புகுந்ததில் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. மேலும், 25 முதல் 30 வீடுகள் சேதமடைந்தன. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு மேலும் […]

Loading

செய்திகள்

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் பலி :

தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் ; ரூ. 10 லட்சம் நிவாரண உதவிக்கு அறிவுறுத்தல் சென்னை, ஏப் 21– திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசு என்று குற்றஞ்சாட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

ஸ்ரீநகர், ஏப்.20– ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஜம்பா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அருகே இருந்த தரம்கண்ட் என்ற கிராமத்தை சூழ்ந்தது. மேலும், நிலச்சரிவால் கிராமத்தில் இருந்த 10–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த […]

Loading

செய்திகள்

இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்:

திருமணம் நடக்க சில நாட்களே இருந்த இளம் பெண் பத்திரிகையாளர் பலி டெல் அவிவ், ஏப். 20– காசாவில் பணியாற்றி வந்த 25 வயதான இளம் பெண் பத்திரிகையாளர் திருமணம் நடக்க சில நாட்களே இருந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியதிலிருந்து போர் நடவடிக்கைகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு ஆவணப்படுத்திய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய வான்வழி […]

Loading

செய்திகள்

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி; 14 பேர் உயிருடன் மீட்பு

டெல்லி, ஏப். 19– டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதன்காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். 4 பேர் பலி […]

Loading

செய்திகள்

காங்கோ தீ விபத்து: படகு எரிந்து 50 பேர் பலி

கின்சாசா: காங்கோவில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் 50 பேர் உயிரிழந்தனர். மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறுகளில் படகு போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை விரும்புகின்றனர். இந்நிலையில், வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 400க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணம் […]

Loading

செய்திகள்

சிவகாசியில் மின்சாரம் தாக்கி பலியான கணவன் –மனைவி – பாட்டி குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஏப்.15– விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமம், வடக்குத்தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் மறுபூஜைக்காக நேற்று (14–ந் தேதி) மாலை சுமார் 3.10 மணியளவில் ரேடியோ அமைக்கும் பணியின்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரின் […]

Loading