செய்திகள்

நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: பதவியை நீக்க ஒன்றிய அரசு தீர்மானம்?

டெல்லி, மே 28– டெல்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14ஆம் தேதி திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே பணியிட […]

Loading

செய்திகள்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி ஏற்றார்

புதுடெல்லி, மே 14– சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி சுப்ரீம்கோர்ட்டின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு […]

Loading

செய்திகள்

தென் கொரிய முன்னாள் பிரதமர் ஜனாதிபதி பதவிக்கு போட்டி

சியோல், மே 2– முன்னாள் தென் கொரிய பிரதமர் ஹான் டக்-சூ, ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதுடன் நாட்டின் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வந்து ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைக்கவும் உறுதி அளித்துள்ளார். தென் கொரியாவில் ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக இருந்த பதவியை ஹான் வியாழக்கிழமை ராஜினாமா செய்தார். முன்னாள் பிரதமரான ஹான், ஜனநாயக கட்சியின் லீ ஜே-ம்யூங்கை எதிர்த்து […]

Loading

செய்திகள்

ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ

வைகோ அதிர்ச்சி சென்னை, ஏப்.19– ம.தி.மு.க.,வின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து வைகோ மகனும், திருச்சி எம்.பி.,யுமான துரை வைகோ திடீரென விலகினார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை, கட்சியின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முக்கிய மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், கட்சியில் இருந்து வெளியேறினர். அப்போது கட்சி துணை பொதுச்செயலர் மல்லை சத்யா வெளியேறாமல், கட்சியிலேயே இருந்தார். கட்சியின் முன்னணி நிர்வாகியாக தற்போதும் அவர் இருக்கிறார்.இந்நிலையில், கட்சியில் அதிகார மையமாக உருவெடுத்த […]

Loading

செய்திகள்

அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடியை நீக்கக் கோரி ஐகோர்டில் பொதுநல மனு தாக்கல்

சென்னை, ஏப். 16– சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திராவிட கழகம் சார்பில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், பொன்முடியை […]

Loading