சென்னை, ஜன. 28– பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024–2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அன்னை தெரசா, பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து 36 வீராங்கனைகள் சென்றுள்ளனர். 3 மேலாளர்கள், 3 பயிற்றுநர்கள் உடன் சென்றுள்ளனர். அப்போது அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்கும், பீகார் தர்பங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையே நடந்த போட்டியின்போது தமிழக வீராங்கனை மற்றும் நடுவர் இடையே […]