டெல்லி, டிச. 16– மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி, காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், […]