செய்திகள்

தி.மு.க. , நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி, மே 14– திருநெல்வேலியை அடுத்துள்ள கீழ முன்னீர்பள்ளத்தில் தி.மு.க., நிர்வாகி செல்வ சங்கர் வீட்டின் மீது மர்ம நபர்கள் அதிகாலையில் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலியை அடுத்துள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வ சங்கர் (45). இவர் பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென, இவரது வீட்டு முன்பு பயங்கர சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து […]

Loading

செய்திகள்

நெல்லை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

நெல்லை, ஜன. 26– நெல்லை அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை அருகே மானூரை அடுத்த வெங்கலபொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் சுபாஷ் (வயது 37). இவர் நெல்லையில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 29 வயதான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ஜெபக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அந்த இளம்பெண், சுபாஷை தொடர்பு கொண்டு பேசினார். தொடர்ந்து இளம்பெண்ணை சுபாஷ் நெல்லை வண்ணார்பேட்டையில் […]

Loading

செய்திகள்

நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றம்

மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்படுகிறது திருநெல்வேலி, டிச. 22– திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

நெல்லையில் இளைஞர் படுகொலை சம்பவம் எதிரொலி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு சென்னை, டிச. 22– திருநெல்வேலி கோர்ட் அருகே நடந்த கொலை சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நெல்லை நீதி​மன்ற வளாகத்​தில் வழக்கு விசா​ரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞரை நீதி​மன்ற வாயி​லில் வைத்து 7 பேர் கொண்ட கும்பல் வெட்​டிப்​படு​கொலை செய்​தது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட் நீதிப​திகள் எஸ்.எம்​.சுப்​ரமணி​யம், […]

Loading

செய்திகள்

நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி, தோட்டாக்கள் திருட்டு

பணகுடி, டிச. 6– திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் 25 தோட்டக்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் நம்பி. இவரது மகன் அழகு(வயது 42). இவர் அமிர்தசரசில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அழகு கடந்த 2010-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி […]

Loading

செய்திகள்

ஆளுநருக்கு எதிரான போராட்டம்–இந்திய மாணவர்கள் சங்கத்தினர் கைது

நெல்லை, அக். 26 பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடக்கிறது. விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் […]

Loading