திருநெல்வேலி, மே 14– திருநெல்வேலியை அடுத்துள்ள கீழ முன்னீர்பள்ளத்தில் தி.மு.க., நிர்வாகி செல்வ சங்கர் வீட்டின் மீது மர்ம நபர்கள் அதிகாலையில் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலியை அடுத்துள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வ சங்கர் (45). இவர் பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென, இவரது வீட்டு முன்பு பயங்கர சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து […]