செய்திகள்

நீட் தேர்வில் தேர்ச்சி: மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை

காஞ்சீபுரம், ஜூலை 27– நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரி இடஒதுக்கீட்டுக்கு காத்திருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு காமராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவரது மகள் 18 வயது இளம்பெண். அவர் சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவிட்டு, டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு எழுதி 502 மதிப்பெண் பெற்றிருந்தார்.இந்த […]

Loading

செய்திகள்

மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு ‘நீட்’ மறுதேர்வு

இந்தூர், ஜூலை.2- நீட் தேர்வின்போது மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மத்திய பிரதேச ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு கடந்த மே 4ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். அதன்தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன. இதற்கிடையே மத்தியபிரதேச மாநிலம் இந்தூர், உஜ்ஜயின் உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதிய சில மாணவர்கள், மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தூர் கிளையில் வழக்கு […]

Loading

செய்திகள்

‘நீட்’ தாண்டியும் உலகம் இருக்கு: மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

சென்னை, மே 30– “நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு, அது ரொம்ப பெருசு” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, காசுக்காக ஓட்டுப்போடும் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில் சட்டசபை தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை இன்று தமிழக […]

Loading

செய்திகள்

கடும் சோதனைக்குப் பின் நீட் தேர்வு தொடங்கியது

சென்னை, மே 4– நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்கள் கடும் சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) […]

Loading

செய்திகள்

நீட் தேர்வு பயம் : தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

சென்னை, மே 4– நீட் தேர்வு பயத்தில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மாணவி கயல்விழி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி […]

Loading

செய்திகள்

புதுவையில் 12 மையங்களில் நீட் தேர்வு

5230 மாணவ மாணவிகள் எழுதினர் புதுவை, மே.4 – புதுவையில் மருத்துவக்கல்லூரில் இடம் பிடிப்பதற்கான நீட் தேர்வை 5230 மாணவ மாணவிகள் இன்று எழுதினர். புதுவையில் – 8 , காரைக்காலில் – 4 , மாகே,ஏனம் பகுதிகளில் தலா 1 வீதம் மொத்தம் 12 மையங்களில் அவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். மாணவ மாணவிகள் சோதனை செய்யப்பட்டு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரபரப்பாக […]

Loading

செய்திகள்

‘நீட்’ அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது : அண்ணாமலை

சென்னை, ஏப்.9– ‘நீட்’ தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளின் வருமானத்திற்காக நீட் தேர்வை திமுக எதிர்க்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– நீட் தேர்வு வந்த பிறகே, தமிழகத்தில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி […]

Loading

செய்திகள்

நீட்’ ரத்து என சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வுக்கு தேர்தலில் மக்கள் மரண அடி கொடுப்பார்கள்

சென்னை, ஏப். 4– நீட் தேர்வு ரத்துச் செய்யப்படும் என்று கடந்த சட்டசபை தேர்தலில் பொய் வாக்குறுதி அளித்து ஓட்டுக்களை பெற்ற தி.மு.க.,வுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மரண அடி கொடுப்பார்கள் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 10 நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் வீட்டில் 50 பேர் […]

Loading