செய்திகள் நாடும் நடப்பும்

100 நாள் வேலை திட்டம் !

தமிழகத்திற்கு ரூ.2,999 கோடி நிதி விடுவிப்பு சென்னை, 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை […]

Loading

செய்திகள்

வேளான் பட்ஜெட்: முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உயர்த்தப்படும்

சென்னை, மார்ச் 15- தமிழ்நாட்டின் 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்  சட்டமன்றத்தில் தாக்கல்  செய்து வருகிறார். அதில் அவர் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:- * உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள். * விவசாயத்துடன் உழவர்களின் நலனையும் மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. * வேளாண்மை அறிவியல் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு பல்கி பெருகி உள்ளது. […]

Loading

செய்திகள்

உலகின் மொத்த தங்கத்தில் இந்திய பெண்களிடம் 11 சதவீதம்: உலக தங்க கவுன்சில் தகவல்

புதுடெல்லி, டிச. 30– உலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில், இந்திய பெண்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவு 11 சதவீதம் என்று உலக தங்க கவுன்சில் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில்தான் தங்கம் வெறும் சேமிப்பு அல்லது சொத்தாக மட்டுமல்லாமல், பாரம்பரியம், பழக்க வழக்கம், நமது வாழ்முறையை நிர்ணயிக்கும் ஒரு பொருளாகவும் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியர்கள் தங்கம் மீது அதிக ஆர்வம் காட்டி […]

Loading

செய்திகள்

பெஞ்ஜல் புயல், மழை சேதம்: ரூ.614 கோடி நிவாரண நிதி தேவை

வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவிடம் ரங்கசாமி அறிவுறுத்தல் பாண்டிச்சேரி, டிச 9 சமீபத்தில் வீசிய பெஞ்ஜல் புயல், மழை – வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் புதுச்சேரிக்கு 614 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவிடம் முதல்வர் என். ரங்கசாமி அறிவுறுத்தினார். புயல் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, பொது மக்களின் பாதிப்புகளையும் குறைகளையும் கேட்டறிந்த குழுவினர் முதல்வரை […]

Loading

இந்தியா 76! செய்திகள்

விண்வெளித்துறையில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.1,000 கோடி நிதியம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, அக் 25 விண்வெளித்துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.1000 கோடி மூலதன நிதியம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. விண்வெளித்துறையில் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கு உதவ ரூ.1,000 கோடி தொகுப்பு நிதி கொண்ட மூலதன நிதியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மந்திரிசபை கூட்டம் முடிந்த பிறகு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:- […]

Loading