செய்திகள்

அமித் ஷா பதவி விலகக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.கள் போராட்டம்

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுலை தடுத்து நிறுத்திய பாஜக எம்.பி.க்கள் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்.பி. மண்டை உடைந்தது புதுடெல்லி, டிச. 19– அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சை ஆக்குவதாக கூறி பாஜகவும் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுலை […]

Loading

செய்திகள்

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் இருஅவைகளும் ஒத்திவைப்பு புதுடெல்லி, டிச. 18– அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல், பிரியங்கா ஆகியோர் தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் நேற்று அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு […]

Loading

செய்திகள்

விஜய் மல்லையா சொத்து விற்பனையில் வங்கிகளுக்கு கிடைத்த ரூ.14,000 கோடி

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தகவல் டெல்லி, டிச. 18– மோசடி செய்தவர்களின் ரூ.22,280 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை மீட்டுள்ளது என்றும் இதில் விஜய் மல்லையாவின் ரூ.14 ஆயிரம் கோடி சொத்துக்களும் அடக்கம் என்று நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது. இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கையில், “இதுவரை அமலாக்கத்துறை […]

Loading

செய்திகள்

காங்கிரசின் 55 ஆண்டு ஆட்சியில் அரசியலமைப்பில் 77 திருத்தங்கள்; பாஜகவின் 16 ஆண்டில் 22 திருத்தங்கள்

நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேச்சு டெல்லி, டிச. 18– காங்கிரசின் 55 ஆண்டு ஆட்சியில் அரசியலமைப்பில் 77 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் பாரதீய ஜனதாவின் 16 ஆண்டு ஆட்சியில் 22 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விவாதம் நடந்த போது மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, “அரசியலமைப்பு ஒருபோதும் மாறாதது என்றெல்லாம் கருதப்படவில்லை. அரசியலமைப்பை திருத்துவதற்கான விதி 368-ல் உள்ளது. அரசியலமைப்பு மாற்றம் காங்கிரஸ் […]

Loading

செய்திகள்

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்: நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடெல்லி, டிச.17-– தற்போது நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் கூறியதாவது:-– கடந்த 10 ஆண்டுகளில் 12 போலி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. இருப்பினும், தற்போது நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அங்கீகாரம் பெறாதவை. அங்கு வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது. எனவே, அந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேரக்கூடாது. சமூக வலைத்தளங்களில் தீவிரமாக […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டு தினம்: மோடி அஞ்சலி

புதுடெல்லி, டிச. 13 நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டை முன்னிட்டு, தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலில் உயிர்தியாகம் செய்தவர்களின் புகைப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த படங்களுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் […]

Loading

செய்திகள்

டங்ஸ்டன் சுரங்கம்; 10 மாதம் என்ன செய்தீர்கள்: எடப்பாடி கேள்வி

நாடாளுமன்றத்தில் சட்டம் வந்தபோது தி.மு.க. எம்.பி.க்கள் ஏன் எதிர்க்கவில்லை சென்னை, டிச.9– டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு எதிராக இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரும் தி.மு.க. அரசு கடந்த 10 மாதமாக என்ன செய்தார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். பாராளுமன்றத்தில் இதுசம்பந்தமாக கனிம திருத்த சட்டம் கொண்டு வந்தபோது தி.மு.க. ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் கேட்டார். இன்று சட்டசபைக்கு வெளியே அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, டிச.9– எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25–ல் தொடங்கியது. இதில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட மசோதாக்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக […]

Loading

செய்திகள்

வங்கி கணக்கில் 4 நியமனதாரர்களை சேர்க்க அனுமதி நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

புதுடெல்லி, டிச.4- நாடாளுமன்ற மக்களவையில், வங்கி சட்டங்கள் திருத்த மசோதாவை சபையின் பரிசீலனைக்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவின்படி, ஒரு வங்கி கணக்குதாரர், தனது கணக்கில் 4 நியமனதாரர்கள் வரை சேர்த்துக்கொள்ளலாம். கூட்டுறவு வங்கிகளில் இயக்குனர்களின் பதவிக்காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. சட்டப்பூர்வ ஆடிட்டர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதியத்தை வங்கிகளே முடிவு செய்ய உரிமை அளிக்கப்படுகிறது. மசோதா மீதான […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ்

ரூ.1,000 கோடி நிவாரணம் வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தல் டெல்லி, டிச. 02– தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்துள்ளதுடன், வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக விழுப்புரம், புதுச்சேரி, […]

Loading